24 மே, 2010

வடக்கிற்கு நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் CDB --- சிட்டிஸன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ்





ஃபினான்ஸ் லிமிட்டட் நிறுவனமானது, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா நகரங்களில் அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட இரு புதிய சேவை நிலையங்களை அண்மையில் திறந்துவைத்ததன் மூலம் வடக்கிற்கு தனது செயற்பாடுகளை விஸ்தரித்துள்ளது.

இலக்கம் 208, ஸ்டான்லி வீதியில் அமைந்துள்ள யாழ். சேவை நிலையமானது 14 ஊழியர் பலத்தைக் கொண்டுள்ள அதேநேரம் இலக்கம் 79, கந்தசுவாமி கோவில் வீதியிலுள்ள வவுனியா சேவை நிலையம் 10 ஊழியர்களைக் கொண்டுள்ளது. இஈஆ இன் சேவைகளை வடபகுதி மக்களுக்கு வழங்குவதற்காக இவ்விரு நிலையங்களும் தற்போது தயார் நிலையிலுள்ளன.

யாழ். சேவை நிலையமானது இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் திரு. அஜித் நிவாட் கப்ரால் அவர்களினால் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் திரு. கே.ஜி.டீ.டீ. தீரசிங்க, மத்திய வங்கியின் வங்கியல்லா நிதி நிறுவனங்கள் மேற்பார்வைத் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. எஸ். எஸ். ரத்னாயக்க, ஜனாதிபதியின் வங்கியியல் தொடர்பான ஆலோசகர் திருமதி. ராணி ஜெயமஹா மற்றும் மத்திய வங்கியின் உயரதிகாரிகள், பணிப்பாளர்கள், இஈஆ இன் முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் இந்நிகழ்வில் பிரசன்னமாகி இருந்தனர்.

இந்நிகழ்வில் கூடியிருந்த பெருந்திரளான மக்கள் மத்தியில் உரை நிகழ்த்திய மத்திய வங்கி ஆளுநர் திரு. அஜித் நிவாட் கப்ரால் கூறுகையில், வட குடநாட்டினை அபிவிருத்தி செய்வதற்கு மிகவும் அவசியமான விடயம் என்னவெனில், இங்குள்ள சமூகம் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளத் தேவையான உறுதியான கடன் வழங்கல் வசதிகளாகும் என்றார். இந்த முயற்சியில் ஒரு பங்காளியானதன் மூலம், இஈஆ நிறுவனமானது மிகவும் பயன்தரவல்ல முன்மாதிரி திட்டங்களை முன்னெடுத்தமையை வரவேற்ற ஆளுநர், வட குடாநாட்டின் அபிவிருத்தியுடன் ஒட்டுமொத்தமான இலங்கைப் பொருளாதாரமும் வளர்ச்சியடையும் என்றும் சுட்டிக்காட்டினார்.

வடக்கிற்கான விரிவாக்கல் நடவடிக்கையின் ஒரு கட்டமாக, தொழில்முயற்சியாளர்களின் வர்த்தக செயற்பாடுகளுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு புதிய குத்தகை வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் உரையாற்றிய இஈஆ இன் பொதுமுகாமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு.மகேஷ் நாணயக்கார கூறுகையில், யாழ். பிராந்தியத்தில் எமது பிரசன்னத்தின் ஊடாக, புத்தாக்கமான நிதியியல் தீர்வுகளை வழங்கி இப்பகுதியிலுள்ள வர்த்தக சமூகம் மற்றும் பொதுமக்களுக்கு உதவுவதில் நாம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம். அத்துடன், இந்த சமூகத்தின் நிதிசார் தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்வதிலும் நாம் கவனம் செலுத்துவோம். இஈஆ ஆனது இலங்கையின் வங்கியியல் மற்றும் நிதியியல் சேவைகள் துறையில் முக்கிய நிறுவனமாக முன்னேறியுள்ளது. அத்துடன் இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இஈஆ நிறுவனமானது, நிதிக் கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள 07 முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ளது.

இஈஆ இன் திறப்பு விழா தினத்தில் பெருந்திரளான வடபகுதி வாடிக்கையாளர்கள் ஒன்றுதிரண்டிருந்தனர். வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் உறவுப்பாலத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையின் ஒருபகுதியாக, யாழ். சேவை நிலையத்தின் திறப்பு விழாவுக்கு, நாட்டின் ஏனைய பிரதேச கிளைகளைச் சேர்ந்த சில ஊழியர்களையும் இஈஆ அழைத்து வந்திருந்தது. அந்த ஊழியர்களில் அதிகமானவர்களுக்கு வட குடாநாட்டு விஜயமானது, அவர்களது வாழ்க்கையில் முதல் தடவையாக கிடைத்த வாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

புகைப்பட விளக்கம்: இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் திரு.கே.ஜி.டீ.டீ. தீரசிங்க, யாழ் வாடிக்கையாளர் ஒருவருக்கு முச்சக்கர வண்டி குத்தகை தொடர்பான ஆவணங்களை கையளிப்பதைப் படத்தில் காணலாம். இஈஆ இன் பொது முகாமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. மகேஸ் நாணயக்கார, மத்திய வங்கியின் வங்கியல்லா நிதி நிறுவனங்கள் மேற்பார்வைத் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. எஸ். எஸ். ரத்னாயக்க மற்றும் ஜனாதிபதியின் வங்கியியல் தொடர்பான ஆலோசகர் திருமதி ராணி ஜெயமஹா ஆகியோரும் அருகில் உள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக