24 மே, 2010

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்று நோய் பரவும் அபாயம் விழிப்பாக இருக்குமாறு சுகாதார அமைச்சு வேண்டுகோள்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்கள் தம்மை நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக உணவு மற்றும் நீர் விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வெள்ளம் வடிந்து வரும் பிரதேசங்களில் டெங்கு மற்றும் வயிற்றோட்டம் போன்ற நோய்கள் பரவும் அபாயம் நிலவுவதால் மக்கள் கொதித்தாறிய நீரையே பருக வேண்டும் என்று சுகாதார அமைச்சின் நோய் பரவுதல் தடுப்புப் பிரிவு பணிப்பாளர் பபா பலிஹவர்தன தெரிவித்தார்.

அதேவேளை, சுற்றாடலில் நீர் தேங்கி நிற்கும் பொருட்களைத் துப்புரவு செய்து சூழலை சுத்தமாகவும் உலர் நிலையிலும் வைத்திருப்பதன் மூலம் நோய்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமெனவும் அவர் பொது மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

கொதித்து ஆறிய நீர், நன்கு சமைத்த உணவுகளையே உபயோகிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வெள்ளத்தினால் பாதிக்க ப்பட்ட மாணவர்களுக்குப் பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கவும் கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் வலயக் கல்விப் பணிப்பாளருக்கூடாக கல்வியமை ச்சிலிருந்து தமக்கான பாட நூல்கள் மற்றும் சீருடைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். தேசிய பாடசாலை அதிபர்கள் நேரடியாக கல்வியமைச்சுடன் தொடர்பு கொண்டு பாடப் புத்தகங்களையும் சீருடைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக