24 மே, 2010

மீள்குடியேற்றப் பகுதிகளுக்கு சூரிய மின்சாரம் : வவு. அரச அதிபர்

மீள் குடியமர்த்தப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சூரிய சக்தி மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி வவுனியாவில் கல்மடு மற்றும் கனகராயன் குளம் பகுதிகளில் மீள்குடியேற்றப்பட்டிருக்கும் 570 வீடுகளுக்கு சூரிய சக்தி மூலமான மின்சாரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் சார்ள்ஸ் தெரிவித்தார்.

கல்மடுவிலுள்ள 320 வீடுகளுக்கும் கனகராயன் குளத்திலுள்ள 250 வீடுகளுக்கும் இலவசமாக சூரிய சக்தி மூலமான மின்சாரத்தை வழங்க சீட் நிறுவனம் முன்வந்துள்ளது.

அதேவேளை, மாணவர்களின் கல்வி மேம்பாட்டைக் கருத்திற் கொண்டு வவுனியாவிலுள்ள ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அரச அதிபர் சுட்டிக்காட்டினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக