15 மே, 2010

இலங்கையில் சேலைன் உற்பத்தி பிரான்ஸ் உதவியுடன் பூர்வாங்க பணிகள்

இலங்கையில் சேலைன் உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் இவ்வருட இறுதிக்குள் ஆரம்பிக்கப்பட்டு விடுமென்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சேலைன் உற்பத்தி செய்வதற்கான திட்டத்தை ஆரம்பிப்பதற்கான சகல அறிக்கைகளும் தயாரிக்கப்பட்டு விட்டதாகவும் அடுத்த ஆறு மாத காலத்தினுள் பூர்வாங்கப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுவிடுமென்றும் அமைச்சர் சிறிசேன தெரிவித்தார்.

சேலைன் உற்பத்திக்கென பிரான்ஸ் அரசாங்கத்திடமிருந்து 6.4 மில்லியன் யூரோ கடனாகக் கிடைக்கப்பெற்றுள்ளது. தேவையான இயந்திர உபகரணங்கள் மற்றும் பயிற்சிகளைப் பெற்றுக்கொடுக்க பிரான்ஸ் அரசாங்கம் முன்வந்துள்ளது.

இதன்படி ஒரு வருடத்திற்குத் தேவையான 7.2 மில்லியன் சேலைன் போத்தல்களை உற்பத்தி செய்வதே சுகாதார அமைச்சின் இலக்காகும். இதுவரை சேலைன் போத்தல்களை இறக்குமதி செய்யவென வருடாந்தம் 260 மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிட்டு வருகிறது.

இதேவேளை அரசாங்க வைத்தியசாலைகளில் சேலைன் பற்றாக்குறையை நிவர்த்திக்கவென விமானப்படை விமானம் மூலம் 37 ஆயிரம் கிலோ சேலைன் இந்தியாவிலிருந்து தருவிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக