15 மே, 2010

மெக்ஸிக்கோ கடலின் எண்ணெய்க் கசிவினால் அழியும் உயிரினங்களை

10 மில்லியன் டொலர் தேவை
மெக்ஸிக்கோ கடலின் எண்ணெய்க் கசிவினால் அழியும் உயிரினங்களை பாதுகாக்க 10 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படும் என அமெரிக்காவின் வெள்ளைமாளிகை அறிவித்துள்ளது.

மெக்ஸிக்கோ வளைகுடா கடற் பரப்பின் லூசியானா மாகாணக் கரையோரங்களில் தொடர்ந்து படிந்து வரும் எண்ணெய் கசிவினால் பல நூற்றுக்கணக்கான கடல் வாழ் உயிரினங்கள் இறந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இவற்றை பாதுக்க 10 மில்லியன் அமெரிக்க டொலர் வீதமாகும். இந்நிலையில் இச் செயற்திட்டத்தை செயற்படுத்தினால் உலகலாவிய ரீதியி பாரிய நிதி நெருக்கடி ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, படர்ந்து வரும் எண்ணெய் தற்போது மெக்ஸிக்கோவின் மேற்குக் கரையோரத்தில் இருந்து தென் பகுதி கடற்பரப்பு நோக்கிப் படர்ந்து வருகின்றது.

கரையோரத்தில் இருந்து 70 தொடக்கம் 130 மைல் வரை படர்ந்துள்ள மெக்ஸிக்கோ எண்ணெயை முழுமையாக நிறுத்துவதற்கு 72 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்க முடியும். எனினும் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இதனை உறுதி செய்ய முடியாதுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குழாய் ஒன்று உடைந்ததைத் தொடர்ந்து, நாள் ஒன்றுக்கு ஆயிரம் தொடக்கம் 5 ஆயிரம் பீப்பாய்கள் வரை எண்ணெய் கடலில் கசிந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடலடியில் இருந்து எண்ணெய் தோண்டி எடுக்கும் இயந்திர மேடை, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வெடித்துக் கடலில் மூழ்கியதையடுத்தே, மேற்படி அபாயம் ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.

மேற்படி வெடிப்புச் சம்பவத்தின் போது, 11 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக