15 மே, 2010

வற்றாப்பளை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் பக்தர்கள் சென்றுவர பாதுகாப்பு அனுமதி



முல்லைத்தீவு, வற்றாபளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் வைபவத்தினை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் பூசைகள் நடைபெறும்.

எதிர்வரும் 24ம் திகதி திங்கட்கிழமை பொங்கல் உற்சவம் வற்றாப்பளையில் நடைபெறும் என ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர். பொதுமக்கள் ஆலயத்திற்குச் சென்று வருவதற்கு முல் லைத்தீவு மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி அனுமதி வழங்கியுள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி இமல்டா சுகுமார் தெரிவித்தார்.

மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலய பொங்கல் வைபவம் வன்னி பாரம்பரிய முறைப்படி நடைபெறுவது வழக்கமாகும்.

கடலில் தீர்த்தம் எடுத்து வந்து எதிர்வரும் 17ம் திகதி முதல் ஒரு வாரத்திற்கு முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் தீபம் ஏற்றப்பட்டு வழிபாடுகள் நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக