15 மே, 2010

தமிழ் மக்களின் வாழ்வை வளப்படுத்துவதிலும் படையினர் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

பயங்கரவாத யுத்தத்தை வெற்றி கொண்டது போன்று தமிழ் மக்களின் மனதை வெல்வதுடன், அவர்களின் வளமான வாழ்வை அபிவிருத்தி செய் வதிலும் படையினர் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென பாரம்பரிய கைத் தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத் துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற தேசிய போர் வீரர்கள் தின நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போதே அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்று கையில், அழகான எமது இலங்கைத் தீவில் மீண்டும் அழகொளிரும் தருணம் ஏற்பட்டுள்ளதுடன் சமாதானப் பூக்களும் பூக்கத் தொடங்கியுள்ளன.

இலங்கையில், தற்போது பயங்கர வாதம் நீக்கப்பட்டு மூவின மக்களும் அச்சமின்றி வாழக்கூடியதொரு சூழல் தோன்றியுள்ளது. இவ்வளவு காலமும் நிலவி வந்த பயங் கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட் டுள்ளதுடன், உயிர் அச்சுறுத்தல் நீங்கப்பெற்று மக்கள் சந் தோஷமாகவும் அமைதியாகவும் வாழ் கின்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உறுதியான தலைமையின் கீழ் மக்கள் இன்று நிம்மதிக் காற்றை சுவாசிக்கக் கூடிய வகையில் சூழ்நிலையை ஏற்படுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஜனாதிபதி ஆட்சிப் பொறுப்பேற்றதும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சமாதான முன்னெடுப்புக்களுக்காக அழைத்திருந்த போதும் அதனை மறுத்த புலித் தலைமை சமாதான முன்னெடுப்பு களை முறித்துக் கொண்டது.

இதனால் தமிழ் இளைஞர்கள் விரும் பியும் விரும்பாமலும் பலாத்காரமாகவும் போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை க்குத் தள்ளப்பட்டனர். போரின் மீது எமது மக்கள் உயிர்களையும், உடமைகளையும் இழந்து நிர்க்கதியான நிலையில் நலன்புரி முகாம்களில் அவல வாழ்வு வாழ வேண்டிய அவலம் தோன்றியது.

எனவே பயங்கரவாதத்தால் உயிரிழந்த அத்தனை பேரையும் இன்றைய நாளில் நினைவுகூரும் அதேவேளை கொடும் போரின் போது எமது மக்களுக்கு படையினர் வழங்கிய பல்வேறு உதவி வேலைத் திட்டங்களுக்காக நன்றி கூறவும் கடமைப்பட்டுள்ளேன்.

பயங்கரவாத யுத்தத்தை படையினர் எப்படி வெற்றி கொண்டனரோ அதே போன்று உயிர், உடமைகளை இழந்த நிலையில் மீள்குடியேறி வரும் மக்களின் மனங்களை வெல்வதுடன் அவர்களது எதிர்கால வளமான வாழ்வின் அபிவிருத் திக்காகவும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்.

அதேநேரம் விரும்பியோ, விரும்பாமலோ புலிகள் இயக்கத்தின் சார்பில் கடந்தகால அழிவு யுத்தத்தில் பங்கேற்றிருந்த எமது இளைஞர், யுவதிகள் கூடிய விரைவில் புனர்வாழ்வளிக்கப்பட்டு, விடுவிக்கப்படல் வேண்டும். இடம்பெயர்ந்த மக்களுக்கான மீள் குடியேற்றங்கள் துரிதமாக முன் னெடுக்கப்படல் வேண்டும். புனர்வாழ் வளிக்கப்பட்ட எமது பிள்ளைகள் அவர் களது குடும்பத்தாருடன் நிம்மதியாக வாழும் நிலை விரைவாக ஏற்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக