15 மே, 2010

சுமுக நிலை நோக்கி முன்னேறுவோம்

பொலிஸ் சேவையிலும் பாதுகாப்புப் படை களிலும் கணிசமான தமிழர்கள் பணி யாற்றிய ஒரு காலம் இருந்தது. இன் றைய இளம் சந்ததியினருக்கு இது தெரியாது. தமிழர் கள் புறக்கணிக்கப்படுகின்றார்கள் என்ற பிரசாரத்தை இவர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ்க் குழுக்களின் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த பின்னரே பொலிஸ் சேவையிலும் பாதுகாப்புப் படை களிலும் தமிழரின் எண்ணிக்கை வீழ்ச்சியடையத் தொடங்கியது. ஆயுதப் போராட்ட காலத்தில் இடம் பெற்ற ஊடுருவல்கள் காரணமாகப் பொலிஸ் சேவை யிலும் பாதுகாப்புப் படைகளிலும் தமிழர்களைச் சேர் த்துக்கொள்வது குறைந்தது. தமிழர்கள் இச் சேவைக ளில் சேர்வதும் குறைந்தது.

பொலிஸ் சேவையிலும் பாதுகாப்புப் படைகளிலுமுள்ள தமிழர்கள் பலரைத் தமிழ் ஆயுதக் குழுக்கள் கொலை செய்த பின்ன ணியில் இச்சேவைகளில் சேர்வதற்குத் தமிழர்கள் முன் வரவில்லை.

பாதுகாப்புப் படைகளிலும் பார்க்கப் பொலிஸ் சேவை பொதுமக்களுடன் நேரடியான தொடர்பு கொண்டுள் ளது. பொதுமக்களின் மொழியில் அவர்களுக்குச் சேவை யாற்ற வேண்டிய கடப்பாடு பொலிஸ் சேவைக்கு உண்டு.

தமிழ் மக்களின் முறைப்பாடுகளைப் பொலிஸ் நிலையத்தில் தமிழில் பதிவு செய்வதற்கு இயலாதிரு ப்பது பற்றிக் கடந்த காலங்களில் சுட்டிக்காட்டியதை யடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குத் தமிழ் கற்பிக்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் விளைவாகப் பல பொலிஸ் நிலையங்களில் தமிழ் மக்களின் முறைப்பாடுகள் தமிழில் பதிவு செய்யப் படும் நடைமுறை தொடங்கியது.

பாதுகாப்பு அமைச்சு பொலிஸ் சேவையில் தமிழர்களை சேர்த்துக்கொள்ளும் நடைமுறையை இப்போது ஆர ம்பித்திருக்கின்றது. பொலிஸ் சேவையில் சேர்வதற்கு யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து ஆறாயிரத்துக்கு மேற் பட்டோர் விண்ணப்பித்திருந்த போதிலும் நேர்முகப் பரீட்சையில் 500 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு முதற்கட் டமாக 367 பேர் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல் லூரியில் பயிற்சி பெறுகின்றனர்.

யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து ஆறாயிரம் பேர் பொலிஸ் சேவைக்கு விண்ணப்பித்ததும் 500 பேர் தேர்ந்தெடு க்கப்பட்டதும் சாதாரண விடயமல்ல.

ஆயுதக் குழுக் களுக்குப் பயந்து பொலிஸ் சேவையில் சேர்வதைத் தவிர்த்து வந்த தமிழ் மக்களிடமிருந்து ஆறாயிரம் விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதும் பொலிஸ் திணை க்களம் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து 500 பேரைச் சேவைக்குச் சேர்த்திருப்பதும் நாடு முன்னைய சுமுக நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றது என்பதற் கான அறிகுறிகள். இந்த வளர்ச்சிப்போக்கை முன் னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு ஆட்சியாள ர்களுக்கும் தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் உண்டு.

இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வைப் போல, சுமுக நிலையும் ஒரே நாளில் ஏற்படுத்தப்பட முடி யாதது. படிப்படியான செயற்பாடுகளுக்கூடாகவே அது சாத்தியமாகும்.

ஒரு கசப்பான காலகட்டத்தை நாங்கள் கடந்து வந்திருக்கின்றோம். இதற்கு இரு சாராருமே பொறுப்பாளிகள். ஏராளம் இழப்புகளை யும் அழிவுகளையும் சந்தித்துவிட்டோம். அந்தக் கச ப்பான காலகட்டத்தை மறந்துவிடுவோம்.

இதயசுத்தியுடன் முயற்சிப்போமாயின் நாங்கள் கடந்து வந்த சுமுக நிலையை அடைய முடியும். அதற்குச் சாதகமான சூழ்நிலை இப்போது நிலவுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக