15 மே, 2010

விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி செய்ததாக கனடாவில் கைதான பிரபாகரன் தம்பிதுரைக்கு 6 மாத சிறை





விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி செய்ததாக கனடாவில் கைதான பிரபாகரன் தம்பிதுரைக்கு 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபாகரன் தம்பித்துரை (46) என்னும் அவர் புலிகளுக்கு நிதி அனுப்பிய குற்றச்சாட்டின் கீழ் கடந்த 2008 மார்ச் மாதம் கனடாவில் கைது செய்யப்பட்டார்.

கனடா உச்சநீமன்றத்தில் அவருக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது என்றும், இதில், தம்பித்துரைக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்கி நீதிபதி ராபர்ட் பவர்ஸ் உத்தரவு பிறப்பித்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே பசியால் வாடுகின்ற மக்களுக்கு தனது கணவர் உதவியதற்காகவே அவருக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உலகம் விரைவில் உண்மையை உணரும் என்று தம்பித்துரையின் மனைவி கருத்துத் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக