12 மே, 2010

இரு யுவதிகள் மீட்பு : யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா நலன்புரி நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் யாழ். வந்த வேளை கடத்தப்பட்ட இளம் யுவதி ஒருவரும் வல்லைவெளியில் மீட்கப்பட்ட கரவெட்டியை சேர்ந்த இளம் யுவதியும் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வன்னியில் இருந்து வந்த யுவதி இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு பின்னர் வல்லைவெளி பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டார். பற்றைக்குள் மயக்கமுற்ற நிலையில் இருந்த இவரை அவதானித்த பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு அறிவித்தனர்.

இதனையடுத்து யுவதி மீட்கப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

யுவதியின் கழுத்தில் பல வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும் மேலதிக சிகிச்சைகளுக்காக இவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து இடம்பெறும் கடத்தல் சம்பவங்களினால் மேலதிக பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் யாழ். நகரில் இரவு, பகல் வேளைகளிலும் தொடர்ந்து ரோந்து நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபடுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக