12 மே, 2010

பார்வதி அம்மாள் வல்வை செல்கிறார் : சிவாஜிலிங்கம் தகவல்

பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை வல்வெட்டித்துறைக்கு அழைத்துச் செல்லப் போவதாக சிவாஜிலிங்கம் எமது இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

அதேவேளை, இந்தியா வழங்கிய நிபந்தனையுடனான மருத்துவ உதவிகளை ஏற்றுக்கொள்ள பார்வதி அம்மாளின் இரு பிள்ளைகளும் விரும்பவில்லை என்றும் இதனால் அவரின் இந்திய மருத்துவ உதவி கைவிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

அத்துடன் தொடர்ந்தும் அவர் தனது கண்காணிப்பின் கீழ், வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவார் எனவும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.

நேற்றைய தினம் கொழும்பு வந்தடைந்த பார்வதி அம்மாள் கடந்த 10 வருடங்களாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக