17 ஏப்ரல், 2010

இராணுவ வீரர்களை ஏற்றி வந்த பஸ் மாத்தளையில் விபத்து


இராணுவ வீரர்களை ஏற்றி வந்த பஸ் ஒன்று வில்கமுவவில் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒரு இராணுவ வீரர் உயிரிழந்தார். மேலும் ஆறு இராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

புது வருடத்தைக் கொண்டாட விடுமுறையில் வந்த இராணுவ வீரர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகினர்.

60 இராணுவ வீரர்களை ஏற்றி வந்த மேற்படி பஸ் மாத்தளை வில்கமுவ எலவனாகந்த என்ற இடத்தில் பள்ளத்தில் வீழ்ந்து சேதத்திற்குள்ளானது. காயமடைந்த வீரர்கள் தம்புள்ள, மகியங்கனை, வில்கமுவ,பேராதனை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் மரணமான இராணுவ வீரர் இலங்கை இராணுவத்தின் கெமுனு படையணியைச் சேர்ந்த ஹப்புத்தளை பிரதேசவாசி எனக் கூறப் படுகிறது. வில்கமுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக