17 ஏப்ரல், 2010

மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரன் தாயாருக்கு அனுமதி மறுப்பு




மனிதாபிமானம் இல்லாத செயல் பார்வதி அம்மா பிரபாகரனிடம் போராட்டத்தை விட்டு சும்மா வீட்டில் இரு என்று கூறி இருந்தால் அவர் கேட்டிருப்பார ?
சிகிச்சை பெறுவதற்காக மலேசியாவிலிருந்து விமானம் மூலம் வெள்ளிக்கிழமை இரவு சென்னை வந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் அவர் மீண்டும் மலேசியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.

இலங்கையின் இறுதிக்கட்ட போரின்போது, பிரபாகரனின் பெற்றோர்களான வேலுப்பிள்ளை, பார்வதி ஆகியோர் இலங்கை அரசின் முகாமில் தங்கியிருந்தனர். போர் முடிந்த நிலையில், அண்மையில் வேலுப்பிள்ளை மரணமடைந்தார்.

இந்நிலையில் நோயால் பாதிக்கப்பட்ட பார்வதி அம்மாள் மலேசியா சென்றார். சென்னையில் சிகிச்சை பெற விரும்பிய பார்வதி, இந்தியாவில் 6 மாத காலம் தங்குவதற்காக விசா பெற்றுள்ளார் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து சிகிச்சை பெறுவதற்காக வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணிக்கு மலேசியா நாட்டிலிருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தார். அவருடன் உதவிக்கு ஒரு பெண்ணும் வந்ததாகத் தெரிகிறது.

எனினும் அவர்கள் இருவரையும் தமிழகத்துக்குள் அனுமதிக்க மாநில போலீஸக்ஷ்ர் மறுத்துவிட்டனர். அவர்கள் இருவரும் உடனடியாக மீண்டும் மலேசியாவுக்கே திருப்பி அனுப்பப் பட்டுவிட்டனர்.

இதற்கிடையே விமான நிலையத்திலிருந்து பார்வதி அம்மாளை அழைத்துச் செல்வதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் ஆகியோர் விமான நிலையம் வந்தனர்.

எனினும் விமான நிலைய நுழைவாயிலிலேயே வைகோவும், பழ. நெடுமாறனும் போலீஸக்ஷ்ரால் தடுத்து நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் கடுமையான வாக்குவாதத்துக்குப் பின் அவர்கள் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து வைகோ, நெடுமாறன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

80 வயது நிறைந்த பார்வதி அம்மாள் தள்ளாத வயதில், நோயால் மிகவும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்காக இந்திய அரசின் முறையான விசா அனுமதி பெற்று, சென்னை வந்தார். ஆனால், தமிழக போலீஸக்ஷ்ர் அவரை சென்னைக்குள் நுழைய முடியாதவாறு தடுத்து விட்டனர். தமிழக போலீஸக்ஷ்ரின் இந்த செயல் சட்ட விரோதமானது மட்டுமல்ல, மனிதாபிமானமற்றதும் ஆகும்.

ஏற்கெனவே 4 மணி நேரம் விமானத்தில் பயணம் செய்து வந்த பார்வதி அம்மாளை, உடனே திருப்பி அனுப்பியதால், அவரது உயிருக்கு எந்த பாதிப்பாவது ஏற்பட்டால் அதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக