12 ஏப்ரல், 2010

பாலித ரங்கே பாண்டாரவை தாக்கிய ஐந்து பேர் விளக்கமறியலில்

ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக போட்யிட்டு வெற்றி பெற்ற பாலித ரங்கே பண்டாரவின் தாக்குதலில் தொடர்பில் கைதான 05 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்பகள் ஐந்து பேரும் சிலாபம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் இம் மாதம் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

இந்த சந்தேக நபர்கள் அடையாள அணிவகுப்பிற்கு உட்டபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவத்துள்ளார். மேலும் தாக்குதலுக்கு உள்ளான பாலித ரங்கே பண்டாரவின் உடல்நிலை தற்போது தேறி வருவதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சி சார்பில் புத்தள மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பாலித ரங்கே பண்டார மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் காயமடைந்த பாலித ரங்கே பண்டார நேற்றிரவு கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக