12 ஏப்ரல், 2010

தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் நளை வர்த்தமானி மூலம் அறிவிப்பு



நடைப்பெற்று முடிந்த பொது தேர்தலில் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் நாளை வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட உள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

இதுவரை 20 மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் 180 பெயர்கள் இதில் அறிக்கப்பட உள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக தெரிவு செய்யப்பட்ட 117 உறுப்பினர்களினதும், ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் தெரிவு செய்யப்பட்ட 46 உறுப்பினர்களினதும், இலங்கை தமிழரசு கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்ட 12 உறுப்பினர்களினதும், மற்றும் ஜனநாயக தேசிய கூட்டமைப்பில் சார்பில் தெரிவாகியுள்ள 05 உறுப்பினர்களினதும் பெயர்கள் நாளை உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

எதர்வரும் 20 ஆம் திகதி தேர்தல் நடைப்பபெற்று முடிந்த பின்னர் திருகோணமலை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய தேர்தல் தொகுதிகளின் உறுப்பினர்களின் பெயர்கள் உத்தியோக பூர்வமாக அறிவிக்ப்படும் எனவும், இதேவேளை தேசியபட்டியல் உறுப்பினர்களின் பெயர்களும் அறிவிக்கபடும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக