20 மார்ச், 2010

கைக்குண்டு வைத்திருந்த நபர் வட்டுக்கோட்டையில் கைது




வட்டுக்கோட்டை கள்ளுத் தவறணையில் கைக்குண்டுடன் நின்ற நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டு - மூளாய் வீதியில் அமைந்துள்ள கள்ளுத்தவறணை ஒன்றில் கைப்பையுடன் ஒரு நபர் நின்றிருந்தார். மது பரிசோதனைக்காக அங்கு வந்திருந்த மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கைப்பையில் கசிப்பு இருக்கின்றதா எனச் சந்தேகித்து சோதித்த போது, அதற்குள் கைக்குண்டு ஒன்று இருந்ததைக் கண்டனர்.

உடனே வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. பொலிஸார் அந்நபரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் தொல்புரம், முன்கோட்டையைச் சேர்ந்த எஸ்.மகேந்திரம் என விசாரணையின் போது தெரிய வந்தது. இவர் ஏன் கைக்குண்டு வைத்திருந்தார் என்பது தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக