20 மார்ச், 2010

புத்தளம் ஆலங்குடாவில் ஐ.ம.சு.மு. - ஸ்ரீ.ல.மு. கா. இடையில் மோதல்



புத்தளம் ஆலங்குடாவில் கட்சி ஆதரவாளர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் வாகனங்கள் சிலவும் சேதமாக்கப்பட்டுள்ளன எனக் கூறப்படுகிறது.

புத்தளம் ஆலங்குடாவில் இடம் பெயர்ந்தவர்கள் வசிக்கும் பகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர் ஒருவ்ர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச ஆதரவாளர்களினால் கடுமையாகத் தாக்கப்பட்டுப் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இடம்பெற்று சில மணித்தியாலங்களுக்குள் அப்பிரதேசத்தில் இரு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையில் இடம்பெற்ற மற்றுமொரு தாக்குதல் சம்பவத்தில் மேலும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் ஆதரவாளர்களின் வாகனங்கள் சில உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிசார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக