5 ஜனவரி, 2010

புளொட் தலைவரின் முயற்சியால் இடம்பெயர்ந்த மக்களுக்கு துவிச்சக்கர வண்டி!

அண்மையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனிடம்,அப் பகுதியில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் குறைந்தது தமது போக்குவரத்துக்கு ஒரு துவிச்சக்கர வண்டியாவது பெற்றுத்தருமாறு கோரியிருந்தனர்.
இது விடயமாக அரசின் கவனத்திற்கு தலைவர் சித்தார்த்தன் கொண்டு வந்திருந்தார். அதன் பலனாக அண்மையில் மன்னார் மாவட்டத்தில் குடியேற்றப்பட்ட மக்களில் ஒரு தொகையினருக்கு இலவச துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு செய்யப்பட்ட நிலையில், தற்போது கிளிநொச்சி முல்லை மாவட்டங்களில் குடியேறிய மக்களுக்கும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்படும் என வடக்கு ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட இரண்டாயிரம் குடும்பங்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள தாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் போக்குவரத்து வசதிகளை இலகுபடுத்தும் நோக்குடன் “வடக்கின் வசந்தம்” வேலை த்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. நேற்றைய தினம் 600 குடும்பங்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் கையளிக்கப்பட்டதாக வும் அவர் தெரிவித்தார்.
புதுமாத்தளன் பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்த துவிச்சக் கர வண்டிகள் படையினர் மூலம் திருத்தி யமைக்கப்பட்டு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஒரு குடும்பத்திற்கு ஒரு துவிச்சக்கர வண்டி வீதம் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்