5 ஜனவரி, 2010

தமிழ் தேசிய கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரிக்க முடிவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னைநாள் இராணுவ தளபதியும் தற்போதைய எதிர்கட்சிகளின் பொது வேட்பாளருமாகிய சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்றைய கூட்டத்தில் முடிவெடுத்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ச்சியாக இன்றும் நடைபெறவுள்ள கூட்டத்தின் பின்னர் சரத் பொன்சேகாவுக்கான ஆதரவினை தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிடும் என்றும் உள்ளக வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

இதேவேளை நேற்றைய கூட்டத்திற்கு ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிவிங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், தெரியவருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக