12 நவம்பர், 2009

ஜனாதிபதி - சரத் விசேட சந்திப்பு


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அலரி மாளிகையில் ஜனாதிபதித் தலைமையில் பாதுகாப்புச் சபைக் கூட்டமொன்று நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து சரத் பொன்சேகா - ஜனாதிபதி இடையில் தனிப்பட்ட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவுக்கு விஜயம் செய்து நாடு திரும்பியதன் பின்னர் முதல் தடவையாக ஜனாதிபதியை, சரத் பொன்சேகா சந்தித்துள்ளார்.

இருவரும் பகல் போசன விருந்துபாசாரம் ஒன்றில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, தேர்தல் குறித்த சரியான அறிவிப்புக்கள் விடுக்கப்படும் வரை, பதவி விலக வேண்டாம் என ஐக்கிய தேசிய முன்னணி, ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் கோரியுள்ளதாகவும் தெரிகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக