7 நவம்பர், 2009

கொழும்பு நாரஹென்பிட்டிய இரவு விடுதிக்குமுன் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்-

கொழும்பு நாரஹென்பிட்டி திம்பிரிகஸ்யாய வீதியிலுள்ள இரவு விடுதிப்பகுதியில் இன்று அதிகாலை 3மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த பிரதேசத்தில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலின்போதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நாரஹென்பிட்டிய பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த இருவரும் இரவு விடுதியிலிருந்து வெளியேறி மோட்டார் சைக்கிளில் புறப்படத் தயாரானபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இவர்கள்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக