7 நவம்பர், 2009

கப்பல் அல்லது விமானம்மூலம் யாழ். வருபவர்கள் அவ்வழியூடாகவே திரும்பிச் செல்ல வேண்டுமென அரசஅதிபர் அறிவுறுத்தல்-

குடாநாட்டுக்கு கப்பல் அல்லது விமானம்மூலம் வருபவர்கள் அவ்வழியூடாகவே யாழ்ப்பாணத்தில் இருந்து பயணத்தை மேற்கொள்ள முடியும் என்று யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஸ் அறிவித்துள்ளார். விமானம்மூலம் வருபவர்கள் கப்பல்மூலம் செல்லவும், கப்பல்மூலம் வருபவர்கள் விமானம்மூலம் செல்லவும் முன்பு அனுமதிக்கப்பட்டிருந்தனர். எனினும் இந்நடைமுறை மாற்றப்பட்டு குடாநாட்டுக்கு வரும் வழியூடாகவே வெளியே செல்லமுடியும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை காங்கேசன்துறையிலிருந்து கப்பல்சேவை நாளையும் 13,18,23,28ம் திகதிகளிலும் இடம்பெறவுள்ளன. மேற்படி தினங்களில் கப்பலில் பயணத்தை மேற்கொள்பவர்கள் அன்றுகாலை 7மணிக்கு யாழ். ரயில் நிலையத்துக்கு பிரசன்னமாகி பயணத்தை மேற்கொள்ளலாம் என்றும் அரச அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக