27 மே, 2011

ஓமந்தைவரை யாழ்தேவி






21 ஆண்டுகளுக்கு பின்னர் வடபகுதிக்கான ரயில் சேவை இன்று வெள்ளிக்கிழமை ஓமந்தை வரை செல்லவுள்ளது.

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் ஓமந்தை ரயில் நிலையம் வைபவரீதியாக பயணிகளுடைய பாவனைக்கு இன்று திறந்துவைக்கப்படும்.

போரின் காரணமாக பாதிக்கப்பட்ட வட பகுதிக்கான ரயில் பாதை புனரமைப்பு பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. ஓமந்தை முதல் பளை வரையிலான பாதை புனரமைப்பினை இந்திய நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

ஆனால் தாண்டிக்குளம் முதல் ஓமந்தை வரையிலான ரயில் பாதை இராணுவத்தினராலும் ரயில்வே திணைக்களத்தினாலும் புனரமைக்கப்பட்டது.

ஓமந்தை ரயில் நிலைய திறப்பு விழாவில் போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கம, பிரதி அமைச்சர் றோகண குமாரதிசாநாயக்க ரயில்வே பொது முகாமையாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்கள்.

1990 ஆம் ஆண்டுக்கு பின்னர் வவுனியாவிற்கு அப்பால் ரயில் சேவை நடைபெறவில்லை. இன்று காலை கோட்டையிலிருந்து வரும் யாழ்தேவி நேரடியாக ஓமந்தை சென்றடையும். வழமைபோல் அனைத்து ரயில்களும் ஓமந்தையிலிருந்தே ஆரம்பிக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

பல்கலைக்கழகங்களை மூடியாவது பகிடிவதைக்கு முடிவு கட்டப்படும்

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை அடுத்த வருடம் முதல் முற்றாக நிறுத்தப்படும். பல்கலைக்கழகங்களை மூடியாவது இதற்கொரு முடிவு கட்டப்படும் என உயர் கல்வியமைச்சர் எஸ். பி. திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களில் ஒரு சிறு குழுவினர் மேற்கொள்ளும் இத்தகைய அநாகரிகமான நடவடிக்கை களினால் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களுமே பாதிக்கப்படுவதாகத் தெரிவித்த அமைச்சர், இதற்கு தீர்க்கமான தீர்வு ஒன்று எட்டப்படும் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஜே. வி. பி. எம். பி. அநுரகுமார திசாநாயக்க முன் வைத்த பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கவனயீர்ப்புப் பிரேரணைக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

சில பல்கலைக்கழகங்களில் பகிடிவதை என்ற பெயரில் மாணவ மாணவியர் பெரும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அண்மைக் காலமாக பெண்கள் மிக மோசமான விதத்தில் வதைக்கப்படுவதுடன் பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஆங்கிலத்தில் பேசுவதற்குக் கூட கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர இனியும் இடமளிக்க முடியாது. அடுத்த வருடத்தில் இதற்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். தேவையேற்படின் பல்கலைக்கழகங்களை மூடியாவது இதற்கு தீர்க்கமான முடிவு கட்டப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

படை வீரர்களுக்கு ஜனாதிபதி வாழ்த்து




நாட்டுக்காக அபரிமிதமான சேவையை ஆற்றிய படை வீரர்களை நினைவு கூரும் தேசிய படை வீரர் தினத்துக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடை கிறேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

எமது தாய்நாட்டுக்காக சகலரும் எதிர்பார்த்த, பிரார்த்தித்த உயரிய சுதந்திரம் உதயமாகியுள்ளது. இதன் முழுமையான கெளரவம் படை வீரர்களுக்கே உரித்தானது.

இந்த சுதந்திரத்திற்காக அவர்கள் தமது உயிர்களை, கை, கால்களை, கண்களை அர்ப்பணித்தார்கள் என்பதை நன்றியுணர்வுடன் நினைவு கூருகிறோம்.

இந்த உயரிய சுதந்திரத்தையும், அபிமானத்தையும் பாதுகாக்க வேண்டியது எம் அனைவரின தும் கடமையாகும்.

இதற்காக நாம் தோல்வியுறச் செய்த பிரிவினைவாதமும், பயங்கரவாதமும் மீண்டும் தலைதூக்கு வதற்குரிய சகல வழிகளையும் தடுக்க வேண்டும். இது படை வீரர்களின் அபிமானத்துக்கும், கெளரவத்துக்கும் எம்மால் செய்ய இயன்ற பெறுமதியான உதவியாகும்.

இதேபோன்று தேசத்தின் கெளரவத்தை பாதுகாத்துத் தந்த படை வீரர்களினதும், அவர்களது குடும்பத்தினரதும் நலன்கள் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதும் எம் அனைவரினதும் கடமையாகும். அரசைப் போன்றே இந்த கடமையை நாட்டின் அனைத்து பிரஜைகளும் நிறைவேற்றுவார்கள் என நான் நம்புகிறேன். என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

உத்தேச தனியார்துறை ஓய்வூதிய சட்டமூலம்:

50 வயதுக்கு உட்பட்ட ஊழியர்கள் இணைந்து கொள்வது கட்டாயம்

50 வயதுக்கு மேற்பட்டோர் விரும்பினால் சேரலாம் கலாநிதி பி.பி. ஜெயசுந்தர



அரசாங்கம் விரைவில் அமுல்படுத்த விருக்கும் தனியார்துறை ஊழியர்களுக்கான ஓய்வூதியத்திட்டத்தில் அங்கத்த வராக இணைந்து கொண்ட ஒருவர் 50 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட காலகட்ட த்தில் மரணமடைந்தால் அவரது மனைவிக்கு அவர் செலுத்திய ஓய்வூதியத் தொகையில் 60 சதவீதம் சேமிப்பு வழங்கப்படும்.

இதேவேளையில் 60 வயதை தாண்டிய பின்னர் ஓய்வூதியத்தை பெற்றுக் கொண்டிருப்பவர் மரணமடைந்தால் அவருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் அவரது மனைவிக்கோ குடும்பத்தாருக்கோ கொடுக்கப்படமாட்டாதென்றும் நிதி திட்டமிடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பி. ஜெயசுந்தர தெரிவித்தார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று நடந்த தனியார் துறை ஊழியர்களுக்கான ஓய்வூதியம் பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

தனியார் ஓய்வூதியத் திட்டத்தில் அங்கத்தவராக சேர்ந்து கொள்ளும் ஒருவரின் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம், மற்றும் பணிக்கொடை கொடுப்பனவுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. சம்பந்தப் பட்ட அங்கத்தவர் இந்த சலுகைகளை தங்கு தடையின்றி பெற்றுக் கொள்ளவும் முடியும்.

இலங்கையில் நடைமுறையில் இருக்கும் தொழில் சட்டங்களுக்கு ஏற்ப பெரும்பாலும் ஒருவர் 57 வயதில் இளைப்பாறுவதுண்டு. எனினும், தனியார் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து கொண்ட ஒருவர் 57 வயதில் இந்த ஓய்வூதியத்தை பெறும் தகுதியை அடைய மாட்டார். அவர் 60 வயதை பூர்த்தி செய்த பின்னரே அவருக்கு இந்த ஓய்வூதியம் வழங்கப்படும்.

தனியார்துறை ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் பற்றி மேலும் விளக்கமளித்த கலாநிதி பி.பி. ஜெயசுந்தர, இந்தச் சட்டத்தின்படி 50 வயதுக்கு குறைவான தனியார் துறை ஊழியர்கள் கட்டாயம் இவ் ஓய்வூதியத்திட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டுமென்றும், 50 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் விரும்பினால் மாத்திரமே இந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து கொள்ள முடியும்.

ஆயினும் ஒருவர் 50 வயதிற்கு பிறகு இந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு சேர்ந்து 60 வயதாகும் போது இளைப்பாறினால் அவருக்கும் இந்த ஓய்வூதியத்திட்டத்தின் மூலம் பயனடைய முடியும். தனியார் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஒருவர் 10 ஆண்டு காலம் சேவையை பூர்த்தி செய்த பின்னரே ஓய்வூதியம் பெறும் தகுதியை பெறுகிறார்.

ஒருவர் 7 ஆண்டுகளை பூர்த்தி செய்த பின்னர், சேவையில் இருந்து இளைப்பாறும் சந்தர்ப்பத்தில் அவர் எஞ்சிய மூன்று ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டிய ஓய்வூதியக் கொடுப்பனவுகளை தமக்கு கிடைக்கும் ஊழியர்சேமலாப நிதிய, ஊழியர் நம்பிக்கை நிதிய மற்றும் பணிக்கொடையில் இருந்து அதற்கான மூன்று ஆண்டுகளுக்கான முழுத் தொகையையும் செலுத்திய பின்னர் ஓய்வூதியத்தை 60 ஆவது வயதில் பெறும் தகுதியை அடைவார்.

இந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு ஊழியர் ஒருவரின் அடிப்படை சம்பளத்தின் 2சதவீதத்தையும், அவர் பணியாற்றும் நிறுவனம் அவ்விதம் 2 சதவீதத்தையும் மாதாந்தம் செலுத்த வேண்டும்.

இந்த ஓய்வூதியத் திட்டத்தில் மூன்று வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பை பெறுகிறார்கள். ஒரு சாரார் தனியார் துறை நிறுவனமொன்றில் தொழில் புரிபவர்கள். இரண்டாவது பிரிவினர் வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர் ஆவர். மூன்றாவது பிரிவினர் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுபவர்களாவர்.

இதேவேளை, 2025ம் ஆண்டில் இலங்கையின் சனத்தொகையில் 60 வயதிற்கு கூடியவர்கள் 20சதவீதம் இருப்பார்கள். அவர்களுக்கு தங்கள் வாழ்க்கையின் இறுதிக் காலத்தை மற்றவர்களை நம்பி வாழாமல், கெளரவ மான முறையில் வாழ்க்கையை உதவும் உன்னத திட்டத்திற்கு அமையவே இந்த ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப் படுகிறதென்று அவர் மேலும் கூறினார்.

மஹிந்த சிந்தனை எண்ணக்கருவில் தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அளித்த வாக்குறுதி இன்று நிறைவேற்றப்படுகிறது.

இந்நிகழ்வில் கலாநிதி பி.பி. ஜெயசுந்தர, தொழில் உறவுகள் அமைச்சர் காமினி லொக்குகே மற்றும் தொழில் அமைச்சின் செயலாளரும், மேலும் சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பில் இன்று யுத்த வெற்றிவிழா




* இராணுவ, படைக்கலங்களுடன் அணிவகுப்பு

* விமானப்படையினர், கடற்படையினர் சாகசம்

* காலி முகத்திடலில் பிரமாண்ட வைபவம்

ஸாதிக் ஷிஹான்

யுத்த வெற்றியின் இரண்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெற்றி விழா அணிவகுப்பு மற்றும் தேசிய படை வீரர்கள் நினைவு தின நிகழ்வு வைபவங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று கொழும்பில் கோலாகலமாக நடைபெறுகிறது.

யுத்த வெற்றி அணிவகுப்பின் பிரதான வைபவம் காலை 8.30 மணிக்கு கொழும்பு காலி முகத்திடலிலும் தேசிய படை வீரர்கள் நினைவு தின பிரதான வைபவம் மாலை 4.30 மணிக்கு பாராளுமன்ற முன்றலில் அமைக்கப்பட்டுள்ள படை வீரர் நினைவு தூபிக்கு அருகிலும் இடம்பெறவுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதமர் தி.மு. ஜயரட்ன பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி எயார் சீப் மார்ஷல் றொஹான் குணதிலக்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம, பொலிஸ் மா அதிபர் கலாநிதி மஹிந்த பாலசூரிய மற்றும் சிவில் பாதுகாப்புப் படை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் உட்பட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

காலி முகத்திடலில் நடைபெறவுள்ள வெற்றி அணிவகுப்பு வைபவத்தில் இம்முறை இராணுவம், கடற்படை, விமானப் படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் என்ற அடிப்படையில் 9035 வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இவற்றில் 108 அதிகாரிகளும், 8927 வீரர்களும் அடங்குவர்.

கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த மற்றும் மேஜர் ஜெனரல் சாகி கால்லகே ஆகியோர் வெற்றி அணிவகுப்புக்கு தலைமை வகிக்கவுள்ளனர்.

படைவீரர்களை கெளரவித்து நினைவு கூரும் வகையில் ஜனாதிபதி அவர்கள் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

இராணுவம்

இராணுவ அணி வகுப்பில் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தின் சகல படைப்பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இராணுவத்தின் கனரக வாகனங்கள், கவச வாகனங்கள், ஆட்லரி படைப் பிரிவு உட்பட மனிதாபிமான நடவடிக்கையின் போது பயன்படுத்தப்பட்ட சகல உபகரணங்களும் இந்த அணிவகுப்பில் செல்லவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்தார்.

கடற்படை

கடற்படை அணி வகுப்பில் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையின் சகல படைப்பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

அணிவகுப்புக்கு மேலதிகமாக கடற்படைக்குச் சொந்தமான வேகப் படகுகளான ‘சுரனிமல’, ‘நந்தமித்ர’, படகுகள், ஆழ்கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும். ‘சயுரல’, ‘சமுதுர’, ‘சாகர’, ‘சக்தி’ கப்பல்கள், ஜெட்லைனர் கப்பல், அதிவேக டோரா படகுகள் மற்றும் பெருந்தொகையான சிறிய ரக படகுகள் காலி முகத்திடல் கடலில் சாகசங்களை காண்பிக்கவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் பிரசன்ன கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

விமானப்படை

இந்த அணிவகுப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானப்படை வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளதுடன் விமானப் படைக்குச் சொந்தமான சுமார் 34 விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் கொழும்பு வான் பரப்பில் பறந்து செல்லவுள்ளதுடன் சாகசங்களையும் காண்பிக்கவுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் குறூப் கப்டன் என்ரு விஜேசூரிய தெரிவித்தார்.

அம்பலங்கொடைக்கும் புத்தளத்திற்கும் இடைப்பட்ட பகுதிகளிலிருந்து இந்த விமானங்கள் பறக்கவுள்ளன. கல்கிசையில் ஒன்றிணையும் விமானங்கள் ஒவ்வொன்றும் 20 செக்கன்கள் இடைவெளியில் பெல் 412, 212 ஹெலிகள் தேசிய கொடிகளை பறக்க விட்ட வண்ணமும் வை – 12, கே - 8, ஏ.என். – 32 மற்றும் ஜெட் விமானங்களும் காலி முகத்திடல் வான் பரப்பில் சாகசங்களுடன் பறந்து செல்லவுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

26 மே, 2011

ஆஸ்திரேலிய அகதி கொள்கைக்கு கண்டனம் ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை

ஆஸ்திரேலிய கரையை நோக்கி படகுகளில் வரும் மக்கள் மற்றும் ஆஸ்திரேலியாவின் பழங்குடியின மக்கள் ஆகியோர் குறித்த ஆஸ்திரேலிய கொள்கைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையர் சீற்றத்துடன் தாக்கியிருக்கிறார்.

அரசியல் தஞ்சம் கோரிவருகின்ற மக்களை கட்டாயமாக தடுத்து வைப்பது என்ற ஆஸ்திரேலிய கொள்கையானது அந்த நாட்டின் மனித உரிமைகள் வரலாற்றின் மீது படிந்துள்ள ஒரு கரு நிழல் என்றும், அந்த நாட்டின் பூர்வகுடியினர் குறித்த அரசாங்க கொள்கையானது அந்த மக்களுக்கு ஆழமான தாக்கத்தையும் வலியையும் கொடுத்திருக்கிறது என்றும் நவிபிள்ளை அவர்கள் கூறுகிறார்.

ஆஸ்திரேலியாவின் தஞ்சக் கோரிக்கையாளர்கள் குறித்த கொள்கையை நவிபிள்ளை அவர்கள் அண்மைக்காலத்தில் இவ்வாறு பகிரங்கமாக விமர்சிப்பது இது இரண்டாவது தடவையாகும்.

அத்துடன் இந்தத் தடவை அவர், தனது விமர்சனத்தை ஆஸ்ரேலியாவின் மூத்த குடிகளான, பழங்குடியின மக்களை அந்த நாட்டு அரசாங்கம் நடத்தும் விதம் குறித்தும் விரிவுபடுத்தியுள்ளார்.

ஆஸ்ரேலிய பிரதமர் ஜூலியா கிலார்ட் அவர்களின் அரசாங்கத்தின் தஞ்சக் கோரிக்கையாளர்களை கட்டாயமாக தடுத்து வைக்கும் கொள்கையானது, ஆஸ்ரேலியாவின் சர்வதேச கடப்பாடுகளை மீறும் ஒன்று என்றும், அந்த நாட்டின் மனித உரிமை குறித்த பதிவுகளில் நீண்ட காலத்துக்கு அது ஒரு கரு நிழலாக படிந்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆண்களும், பெண்களும் மற்றும் அனைத்துக்கும் மேலாக அனைவருக்கும் கவலைதரும் வகையில் குழந்தைகளையும்-- இத்தனைக்கும் அவர்கள் குற்றம் எதுவும் செய்யாத நிலையிலும் கூட தடுத்து வைக்கப்படுகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

அரசியல் தஞ்சக்கோரிக்கையாளர்கள் குறித்த விவாதங்களின் போக்கையும் அவர் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஏதோ குறுக்கு வழியில் நன்மை பெறவிழைபவர்களால் தமது நாடு நிரம்பிவிட்டதாக இவர்களை அரசியல்வாதிகள் திரும்பத்திரும்ப விவரிப்பதாகவும் அவர் குறை கூறியிருக்கிறார்.

பழங்குடியின மக்களின் உரிமைகள் குறித்த விவகாரத்தில் அவர் கடுமையாக சீற்றத்தை வெளியிட்டிருக்கிறார்.

பொருத்தமற்ற நெகிழ்வற்ற கொள்கைகள் பழங்குடியின மக்களுக்கு ஆழமான வலியையும், வேதனையும் தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை ஆஸ்திரேலிய அரசாங்கம் இதுகுறித்த தனது கருத்து எதனையும் வெளியிடவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

எண்ணாயிரம் முஸ்லிம்களின் படுகொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரதான சூத்திரதாரி கைது

போர் குற்றச்சாட்டுகளுக்காக ஐரோப்பாவினால் தேடப்படும் மிக முக்கிய நபர்களில் ஒருவரான முன்னாள் பொஸ்னிய சேர்ப்ஸ் இராணுவ ஜெனரல் ரெட்கோ மிளடிக் தமது நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக சேர்பியா அறிவித்துள்ளது.

ரெட்கோ மிளடிக் பொஸ்னிய சிவில் யுத்தத்தின் போது யுத்தக் குற்றங்களில் இழைத்தமையின்பேரில் தேடப்பட்டு வந்த நபர் ஆவார்.

பொஸ்னியாவின் 'ஸ்ரெப்ரெனிகா' நகரில் 1995 ஆம் ஆண்டில் சுமார் 8,000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இதற்கான கட்டளையை ரெட்கோ மிளடிக்கே வழங்கியதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

சுமார் 10 வருடங்கள் தலைமறைவாகியிருந்த இவர் பொஸ்னிய யுத்தத்தின்போது இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களின் பிரதான சூத்திரதாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நாவின் யுத்தக் குற்றவியல் நீதிமன்றத்தால் தேடப்பட்டு வந்த இவர் மீது இனப்படுகொலை, மனித உரிமை மீறல் உட்பட பல குற்றச்சாட்டுக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

வறுமையின் உச்சிக்குச் சென்று தற்கொலைக்கு துணியும் நிலையிலுள்ள குடும்பங்களின் வாழ்க்கையை மேம்படுத்த புலம்பெயர் நிதிசேகரிப்பு உதவுமா?‏

வறுமையாலும் மன அழுத்தத்தாலும் இன்று யாழ். மாவட்டத்தில் பெண்கள் தற்கொலை செய்கின்ற நிலைமை அதிகரித்து வருகின்றது. இதுபோன்ற ஒரு துயர சம்பவம் நேற்று முன்தினம் யாழ் புன்னாலைக்கட்டுவான் ஈவினையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் புலிகள் இயக்க முன்னாள் பெண் உறுப்பினரான 21வயதுடைய லாவண்யா எனும் யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்துகொண்ட இந்த புலிகளின் முன்னாள் பெண் உறுப்பினரான லாவண்யாவை அவளின் தகப்பன் தண்டித்ததனால் அன்றே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது குடும்பம் கடந்த வன்னி இடப்பெயர்வின் பின்னர் மிகவும் வறிய நிலையில் சீவியம் நடத்தவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்தது. அப்பாவுக்கும் சுகமில்லை பாடசாலைக்கு போகும் நான்கு தம்பிகள். தாய்தான் கூலிவேலை செய்து குடும்பப் பொறுப்பை பார்க்க வேண்டிய நிலைமை. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து சொந்த இடமான புன்னாலைக்கட்டுவானுக்கு வந்து சுமார் ஒன்றரை வருடங்கள் ஆனபோதும் அரசும் அரச அதிகாரிகளும் ஏன் அரசியல்வாதிகளும் இந்தக் குடும்பத்தை கண்டுகொள்ளவில்லை. மிகச்சிறிய குடிசையிலேயே அடிப்படை வசதிகளே இல்லாமல் வாழ்க்கை நடத்தினார்கள். குடும்ப கஸ்டம்; வீடு இல்லை இவ்வாறே மன விறக்தியும் வறுமையும் நிறைந்ததாய் வாழும் வளரும் காலத்தில் வாழ்க்கை நடத்திய லாண்யாவிற்கு தந்தையின் கண்டிப்பு மனமுடைந்து போயிருந்த இவளை இலகுவாக தற்கொலைக்கு கொண்டு சென்றுள்ளது. யுத்த சூழ்நிலையில் இருந்து மீண்டு இரு வருடங்கள் கடந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசு ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எதனையும் எடுக்காத நிலையில், சொந்தங்களை இழந்து சொத்துக்களை இழந்து நிற்கும் இம்மக்களும் முன்னாள் புலி உறுப்பினர்களும் வறுமையாலும் மனவிரக்தியாலும் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பெயரால் ஐரோப்பிய நாடுகளில் சேர்க்கப்பட்ட, சேர்க்கப்பட்டுவரும் நிதியினில் கொஞ்சத்தையேனும் இவ்வாறான மக்களுக்கு கொடுத்து உதவாமல் புலிகளுக்காகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் சேகரிக்கப்பட்ட நிதியினை அதற்குப் பொறுப்பாக செயற்பட்ட பலர் சொகுசாக செலவுசெய்து வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறானோர் மனசு வைத்தால் எந்த வழியிசலும் அந்தப் பணத்தை பாதிக்கப்பட்ட இவ்வாறான மக்களுக்கு சென்றடையச் செய்யலாம். அரசும் அரச அதிகாரிகளும் ஏன் அரசியல்வாதிகளும் இந்தக் குடும்பத்தை கண்டுகொள்ளவில்லை என்று சொல்லிக்கொண்டு இருப்பதைவிட புலம்பெயர் நாடுகளில் உள்ள நிதியினை இவ்வாறான மக்களைச் சென்றடையவாவது ஏதும் வழிவகைகளை செய்வதற்கு புலம்பெயர் நாடுகளில் நிதிசேகரிப்போர் முன்வருவார்களா? அல்லது புலம்பெயர் தமிழர்கள் முன்வந்து இவ்வாறான குடும்பங்களின் துயர் போக்க முன்வருவார்களா என்பதே இப்போதைய அத்தியாவசிய கேள்வியாகவுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

விசாக்களின்றி சிங்கப்பூரில் தங்கியிருந்த 48 இலங்கையர் கைது

சிங்கப்பூரில் விசாக்களின்றி தங்கியிருந்த 48 இலங்கையர்கள் கடந்த திங்கட் கிழமை சிங்கப்பூர் குடிவரவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் செயற்படும் அனைத்து தங்கு விடுதிகளையும் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் சோதனையிட்ட போதே சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 48 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 1570 வரையான வயது பருவங்களைக் கொண்டவர்கள் என்றும் தற்போது அவர்கள் அனைவரும் சிங்கப்பூர் பொலிஸார் வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் கடந்த வாரமும் சிங்கப்பூரில் 52 வரையான சட்டவிரோதப் புகலிடக் கோரிக்கையாளர்கள் அந்நாட்டுப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்தினால் முடியும்: சீனா

இலங்கை தனது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு முழுத் தகைமையையும் கொண்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு சீன அரசாங்கம் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என்று அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் யாவ் ஜீசி தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வெளிவிவகார மைச்சர் ஜி.எல் பீரிஸ் சீனாவுக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் சீன வெளிவிவகார அமைச்சரை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போதே சீன வெளிவிவகார அமைச்சர் யாவ் ஜீசி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் அந்த விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் சீனாவுக்கு சென்றிருந்தார்.

சீன வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின்போது ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது. கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பணிகள், இலங்கை அராங்கத்தால் நியமிக்கப்பட்ட பரஸ்பர முகவராண்மை ஆலோசனைக் குழுவின் முன்னெடுப்புக்கள் என்பன குறித்தும் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் சீன அமைச்ருக்கு எடுத்துக்கூறியுள்ளார்.

இதுகுறித்து வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சீன வெளியுறவு அமைச்சரை அமைச்சர் பீரிஸ் பீஜிங்கில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தினார். இரு நாடுகளுக்குமிடையே நிலவும் இருதரப்பு உறவுகள் மிகவும் சுமுகமானவையென இரு அமைச்சர்களும் குறிப்பிட்டனர்.

சீனாவின் திடமான வெளிநாட்டுக்கொள்கையான “ஒரே சீனா“ என்ற கொள்கையை இலங்கை தொடர்ந்தும் ஆதரிக்கும். சீனா எட்டியுள்ள உயரிய மாற்றமுடியாத முன்னேற்றம் மற்றும் சுபீட்சம் என்பவற்றுக்கு இலங்கையின் சார்பில் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் பயங்கரவாதத்தை பூண்டோடு அழித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சாதனைகளை சீன வெளிநாட்டமைச்சர் பாராட்டியதோடு நாட்டை துரித அபிவிருத்திப் பாதையில் வழிநடத்தியுள்ளமைக்கு தனது அரசாங்கத்தின் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மக்கள் சீனக் குடியரசுக்கு விஜயம் செய்யுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

தருஸ்மன் அறிக்கையிலுள்ள பல்வேறுபட்ட விடயங்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் பணிகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தில் நியமிக்கப்பட்ட பரஸ்பர முகவராண்மை ஆலோசனைக்குழுவின் முன்னெடுப்புக்கள் என்பன குறித்து அமைச்சர் பீரிஸ் சீன அமைச்சருக்கு விவரமாக எடுத்துரைத்தார்.

பொதுவாக உருவாகிவரும் சூழ்நிலைகள் பற்றி சீன வெளிநாட்டமைச்சர் யாவ்ஜீசி குறிப்பிடுகையில், இலங்கை அரசாங்கமும் அதன் மக்களும் தமது சொந்தப் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கான தகைமையை கொண்டுள்ளதை தான் உறுதிப்படுத்துவதாக தெரிவித்தார். இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் மீள் நிர்மாணம் ஆகிய பணிகளை முன்னெடுப்பதற்கு சீனா இலங்கைக்கு பக்கபலமாக இருக்குமென்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் சீனாவின் பங்களிப்பு குறித்து அøமச்சர் பீரிஸ் குறிப்பிடுகையில், அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டம், மாத்தளை விமான நிலையம், புத்தளம் அனல் மின்சார திட்டம், கொழும்பு கட்டுநாயக்கா கடுகதிப் பாதை என்பவற்றுக்கு சீனா நிதி வழங்கியமைக்கு பாராட்டுத் தெரிவித்தார். இலங்கையின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் பல வீதி அபிவிருத்தி மற்றும் மீள் நிர்மாண திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதை இரு அமைச்சர்களும் குறிப்பிட்டதோடு இலங்கையில் முன்வைக்கப்பட்டுள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 2ஆம் கட்டப் பணி மற்றும் மாத்தøற கதிர்காமம் புதிய ரயில் பாதை விஸ்தரிப்பு என்பவற்றுக்கான ஏற்பாடுகள் குறித்தும் இருவரும் பேச்சுவார்ததை மேற்கொண்டனர்.

2011ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேந்கொள்ளும் வருடமென பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பீரிஸ் கூறியதுடன் ஸ்ரீலங்கன் விமக்ஷினசேவை தனது சேவையினை ஷங்காய், குவாங்ஸோ ஆகிய இடங்களுக்கு ஆரம்பித்துள்ளதையும் குறிப்பிட்டார். கடந்த வருடம் ஆகஸ்டில் ஜுனான் மாகாணத்தின் ஆளுநர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டபோது சீன ஈஸ்ரன் எயார்லைன்ஸ் தனது கன்னிச் சேவையை ஆரம்பித்ததை இரு அமைச்சர்களும் மகிழ்வுடன் நினைவுகூர்ந்தனர்.

இலங்கைக்குள் சீன உல்லாசப் பிரயாணிகளை கவர்ந்திழுப்பதில் அதிகரித்த வேகத்தை வழங்கும் வசதியை அளித்ததன் மூலம் இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்ட சேரிட அந்தஸ்தை சீனா வழங்கியுள்ளமை பாராட்டத்தக்கது. மேம்படுத்திய விமானத்தொடர்புடன் இலங்கைக்குள் கூடுதலான சீன முதலீடுகள் வருமென அøமச்சர் பீரிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனை சீன அமைச்சரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...