27 மே, 2011

படை வீரர்களுக்கு ஜனாதிபதி வாழ்த்து




நாட்டுக்காக அபரிமிதமான சேவையை ஆற்றிய படை வீரர்களை நினைவு கூரும் தேசிய படை வீரர் தினத்துக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடை கிறேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

எமது தாய்நாட்டுக்காக சகலரும் எதிர்பார்த்த, பிரார்த்தித்த உயரிய சுதந்திரம் உதயமாகியுள்ளது. இதன் முழுமையான கெளரவம் படை வீரர்களுக்கே உரித்தானது.

இந்த சுதந்திரத்திற்காக அவர்கள் தமது உயிர்களை, கை, கால்களை, கண்களை அர்ப்பணித்தார்கள் என்பதை நன்றியுணர்வுடன் நினைவு கூருகிறோம்.

இந்த உயரிய சுதந்திரத்தையும், அபிமானத்தையும் பாதுகாக்க வேண்டியது எம் அனைவரின தும் கடமையாகும்.

இதற்காக நாம் தோல்வியுறச் செய்த பிரிவினைவாதமும், பயங்கரவாதமும் மீண்டும் தலைதூக்கு வதற்குரிய சகல வழிகளையும் தடுக்க வேண்டும். இது படை வீரர்களின் அபிமானத்துக்கும், கெளரவத்துக்கும் எம்மால் செய்ய இயன்ற பெறுமதியான உதவியாகும்.

இதேபோன்று தேசத்தின் கெளரவத்தை பாதுகாத்துத் தந்த படை வீரர்களினதும், அவர்களது குடும்பத்தினரதும் நலன்கள் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதும் எம் அனைவரினதும் கடமையாகும். அரசைப் போன்றே இந்த கடமையை நாட்டின் அனைத்து பிரஜைகளும் நிறைவேற்றுவார்கள் என நான் நம்புகிறேன். என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக