5 ஏப்ரல், 2010

சாமியார் லீலைகளை படம் பிடித்தது எப்படி? சீடர் லெனின் பரபரப்பு வாக்குமூலம்





சாமியார் நித்யானந்தா நடிகை ரஞ்சிதா விவகாரத்தில் புதுப்புது தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது. இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோ காட்சிகளை சாமியாரின் சீடர் லெனின் வெளியிட்டார். இது சம்பந்தமான வழக்குகள் அனைத்தும் கர்நாடக போலீசிடம் தமிழக போலீஸ் ஒப்படைத்து விட்டது. கொலை மிரட்டல் உள்பட 2 வழக்குகள் மட்டும் சென்னை போலீசில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

நித்யானந்தா வீடியோ வெளியான பின்பு முதல் முறையாக லெனினிடம் கர்நாடக போலீசார் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து 7 மணி நேரம் விசாரணை நடந்தது. அப்போது நித்யானந்தாவின் நடவடிக்கைகள் பற்றி போலீசார் பல்வேறு கேள்விகள் கேட்டு துளைத் தெடுத்தனர். அவற்றுக்கு லெனின் பதில் அளித்துள்ளார். சாமியாரின் நடவடிக்கைகள் பற்றி அவர் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.

இதுபற்றி லெனின் கூறியதாவது:-

சாமியார் நித்யானந்தா வின் பெங்களூர் ஆசிரமத்தில் நான் பணிபுரிந்தேன். அப்போது நித்யானந்தா தவறான நடவடிக்கையில் ஈடுபடுவது தெரிய வந்தது. இதனால் அவரது தவறான நடவடிக்கைகளை வெளி உலகுக்கு காட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன்.

எனவே சாமியாரை வீடியோ படம் எடுத்தேன். வீடியோ கேமராவை நான் சாமியாரின் படுக்கை அறையில் வைக்கவில்லை. அங்குள்ள சிலர் எனக்கு உதவி செய்தார்கள். அவர்கள் தான் கேமராவை வைக்க உதவினர். வீடியோவில் சில காட்சிகள் மட்டும் எடுக்கப்பட்டுள்ளன.

முழு சி.டி.யை கர்நாடக போலீசிடம் ஒப்படைத்து இருக்கிறேன். வீடியோ எடுக்க உதவியவர்களை வெளியிட மாட்டேன். அவர்கள் உதவியதால் தான் வீடியோ எடுக்க முடிந்தது. அந்த வீடியோவை நான் வெளியிட்டேன். இதில் என் பங்கு அவ்வளவுதான். நித்யானந்தாவை ஆயிரக்கணக்கானவர்கள் கடவுளாக பாவித்து வழிபடுகிறார்கள். அவர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக வீடியோவை வெளியிட்டு நித்யானந்தாவின் உண்மையான சொரூபத்தை காட்டினேன்.

ஆசிரமத்தில் உள்ள மேலும் 2 பெண்கள் நித்யானந்தா பற்றி என்னிடம் புகார் தெரிவித்துள்ளனர். அவர்களையும் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி உள்ளார். ஒரு ஆணும், பெண்ணும் நித்யானந்தா பற்றி என்னிடம் தெரிவித்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அதன் பிறகு தான் நித்யானந்தா பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன். 3 மாதத்துக்கு முன்புதான் இந்த வீடியோ எடுக்கப்பட்டது. நித்யானந்தாவால் பாதிக்கப்பட்ட 2 பேரில் ஒருவர் இன்னும் ஆசிரமத்தில் உள்ளார். அவர் நித்யானந்தாவுக்கு எதிராக முறைப்படி புகார் தெரிவித்துள்ளார்.

நித்யானந்தா பற்றி ஒரிஜினல் சி.டி.யை கர்நாடக போலீசாரின் விசாரணையின் போது ஒப்படைத்து இருக்கிறேன். என்னுடன் அவர் டெலிபோனில் பேசி மிரட்டிய ஆடியோ கேசட்டையும் போலீசாரிடம் ஒப்படைத்து இருக்கிறேன்.

நித்யானந்தா என்னை சமரசத்துக்கு வருமாறு அழைத்தார். நான் மறுத்ததால் என்னை மிரட்டினார். நான் ரஞ்சிதாவை காட்டிக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. சாமியாரின் நடவடிக்கைகள் பற்றி வீடியோ எடுக்கும் போது அவர் சிக்கிக் கொண்டார். இதற்காக வருந்துகிறேன். எனது எண்ணம் சாமியாரைப் பற்றி வெளி உலகுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதுதான்.

இவ்வாறு லெனின் கூறி யுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

மனித உரிமை ஆணைக்குழுவிடம் அனோமா புகார்






ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு உரிய மருத்துவ வசதிகள் வழங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியும் மருத்துவ வசதிகள் வழங்கப்படாமையானது மனித உரிமை மீறலாகும் என்பதைச் சுட்டிக்காட்டியும் அனோமா பொன்சேகா மனித உரிமை ஆணைக்குழுவிடம் இன்று முற்பகல் முறைப்பாடு செய்துள்ளார்.

தனது கணவர் சுகவீனமுற்றிருக்கின்ற போதிலும் இதுவரை அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்படவில்லை என அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்ப்பாணத்தில் தொடர்கிறது அச்சம்: வரதராஜ பெருமாள்




இலங்கையில் போர் முடிந்து பல மாதங்களாகிவிட்ட நிலையிலும், யாழ்ப்பாணத்தில் பொதுமக்களிடையே அச்சம் நீடிப்பதாக அப் பகுதியின் முன்னாள் முதல்வர் ஏ.வரதராஜ பெருமாள் தெரிவித்தார்.
÷1990-ல் இலங்கையை விட்டு வெளியேறிய அவர், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் தற்போது யாழ்ப்பாணத்துக்குத் திரும்பியுள்ளார்.
÷இந்நிலையில் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

யாழ்ப்பாணத்தில் கடந்த காலத்தில் கையில் துப்பாக்கியுடன் வீதிகளில் திரிந்த விடுதலைப் புலிகளோ, வேறு எந்த அமைப்பைச் சேர்ந்தவர்களோ, இலங்கை ராணுவ வீரர்களோ ஆதிக்கம் செலுத்தினர்.
÷தற்போது விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான அரசு ஆதரவு பெற்ற ஆயுதக் குழு யாழ்ப்பாண வீதிகளில் வலம் வருகிறது. அவர்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
÷இந்த ஆயுதக் குழுவை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
÷நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சி ஓரிரு இடங்களில் வெற்றி பெறுவது கூட, இந்த ஆயுதக் குழுவின் அத்துமீறல் நடவடிக்கைகள் காரணமாக கேள்விக்குறியாகி விட்டது.
÷இதனால், தமிழ் தேசிய கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.
÷இந்த அச்சம் காரணமாகவே, தான் விரும்பும் கட்சி எது என்பதை சாதாரண மக்கள் வெளிப்படையாக கூறுவதில்லை. அதனால்தான் தேர்தல் பிரசார கூட்டங்களில் மக்கள் கலந்து கொள்வதில்லை.
÷மக்கள் தங்கள் கருத்தை வெளிப்படையாக கூறும் அளவுக்கு நிலையை மேம்படுத்த நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
÷யாழ்ப்பாணத்தில் 30 ஆண்டுகள் விடுதலைப் புலிகள் ஆதிக்கம் செலுத்தியபோதும், தற்போது புலிகள் அமைப்பின் சாதக, பாதக அம்சங்கள் குறித்தோ, பிரபாகரன் குறித்தோ யாரும் பேசுவதில்லை.
÷விடுதலைப் புலிகளை கடந்த காலமாக கருதும் மக்கள், வருங்காலம் குறித்தே தற்போது சிந்தித்து வருகின்றனர்.
÷பொருளாதார முன்னேற்றம் அடையும் அதே நேரத்தில் அரசியல் உரிமையும் தேவை என யாழ்ப்பாணம் மக்கள் கருதுகின்றனர் என்றார் அவர்.
மேலும் இங்கே தொடர்க...

ஆதரவாளர்கள் மறுப்பு: புதிய கட்சி தொடங்க முஷரப்புக்கு சிக்கல்





பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் தற்போது லண்டனில் தங்கியுள்ளார். விரைவில் அவர் பாகிஸ்தான் திரும்ப உள்ளார். அங்கு தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்திருந்தார். அதற்கு வசதியாக புதிய கட்சி தொடங்க திட்டமிட்டிருந்தார். அக்கட்சிக்கு அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம்லீக் என்று பெயரிடவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

அதற்கு பாகிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-கியூ கட்சி மற்றும் அவரது ஆதரவாளர்கள், அரசியல் பிரமுகர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்தனர். புதிய கட்சி தொடங்குவதற்கு முன்னதாக ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள அபுதாபியில் வருகிற 12-ந்தேதி ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த முஷரப் ஏற்பாடு செய்திருந்தார்.

அதில், அவர்கள் கலந்து கொள்வதாக இருந்தது. தற்போது அவர்கள் முஷரப்புக்கு ஆதரவளிக்க தயங்குகின்றனர். முஷரப்புக்கு மிகவும் நெருக்கமாக உள்ள அமீர், சுமேராமாலிக், முகமதுஅலி முரானி, சையத் பைசல், சலேஹயத் மார்விமேமன் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள மறுத்து விட்டனர்.

எனவே புதிய கட்சி தொடங்குவதில் முஷரப்புக்கு சிக்கல் எழுந்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவு





ஏழாவது நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் இன்று திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையும் என அறிவித்துள்ள தேர்தல்கள் திணைக்களம், அதற்குப் பின்னர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கைது செய்யுமாறும் பணித்துள்ளது.

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் 24 மணிநேரத்திற்குள் சகல சுவரொட்டிகள், பதாகைகள், 'கட்அவுட்' கள் மற்றும் கொடிகளை அகற்றிவிடுமாறும் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் சட்டவிரோதமாக சுவரொட்டிகளை ஒட்டுவோரைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் வேட்பாளர் பயணிக்கும் வாகனத்தில் மட்டுமே விருப்பு இலக்கம் மற்றும் சின்னத்தைப் பொறிக்கமுடியும். வேட்பாளர் பயணிக்காத வாகனங்களில் கொடிகள் மற்றும் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருந்தால் அவ்வாறான வாகனங்களைக் கைப்பற்றுவதுடன் அதில் பயணிப்போரையும் கைது செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதேவேளை, பிரதான கட்சிகள் தங்களுடைய இறுதிப் பிரசாரக் கூட்டங்களைத் தென் மற்றும் மேல் மாகாணங்களில் நடத்தவிருக்கின்றன.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதிப் பிரசார கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மிந்தெனியவிலும், ஐக்கிய தேசிய முன்னணியின் இறுதிக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கொழும்பு பலாமரச் சந்தியிலும் நடைபெறவுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்து ஜனநாயக தேசிய கூட்டணி ஏற்பாடு செய்துள்ள இறுதி தேர்தல் பிரசார கூட்டம் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தலைமையில் புதுக்கடையில் நடைபெறவிருக்கின்றது.
மேலும் இங்கே தொடர்க...

மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை இராணுவ நீதிமன்றத்தைக் கூட்ட முடியாது : ஜ.தே.க.





இராணுவ நீதிமன்றம் தொடர்பிலான தீர்ப்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற நிலையில் அரசாங்கம் அறிவித்திருப்பதைப் போல், நாளை செவ்வாய்க்கிழமை இராணுவ நீதிமன்றம் கூட்டப்படுமானால் அது சட்டத்துக்கு முரணானதாகும்.

அவ்வாறு நடைபெறின் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஜனநாயக தேசியக் கூட்டணி எச்சரித்துள்ளது.

றோயல் கல்லூரி மாவத்தையில் அமைந்துள்ள கூட்டணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே கூட்டணியின் தேசிய பட்டியல் வேட்பாளரும் எம்.பி.யுமான அனுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

"இராணுவச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் மற்றும் அவர் நடத்தப்படுகின்ற விதம் தொடர்பிலும் மேலும் பல காரணங்களை உள்ளடக்கியதுமான மனு மீதான விசாரணை நடவடிக்கைகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன.

அத்துடன் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மற்றும் மேற்கொள்ளப்படவிருக்கின்ற தீர்மானங்கள் தொடர்பிலும் அதன் நடவடிக்கைகள் எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டும் இருக்கின்றன.

அதுவரையில், ஜெனரல் பொன்சேகா மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கென நியமிக்கப்பட்டுள்ள இராணுவ நீதிமன்ற விசாரணைகளை இடை நிறுத்தி வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை 6ஆம் திகதி. ஒத்திவைக்கப்பட்டிருந்த ஜெனரல் பொன்சேகா மீதான இராணுவ நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்திருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுகளின் பிரகாரம் இராணுவ நீதிமன்ற விசாரணைகள் நாளைய தினம் முன்னெடுக்கப்படுமானால் அது சட்டப்படி தவறாகும். அது மட்டுமல்லாது இந்த செயல் நீதிமன்றத்தையே அவமதிப்பதற்கு சமனானதாகும்.

எனவே நாளைய தினம் இராணுவ நீதிமன்றத்தை கூட்டவும் முடியாது. விசாரணைகளை முன்னெடுக்கவும் முடியாது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி நாளை ஜெனரல் பொன்சேகா விசாரணைக்கு உட்படுத்தப்படுவாரேயானால் அந்த நீதிமன்றத்துக்கு எதிராகவும் அதில் அடங்கியுள்ள நீதிபதிகளுக்கு எதிராகவும் நாம் நீதிமன்றம் செல்வோம்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இது தொடர்பில் எமது சட்ட ஆலோசகர்கள் ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.ம.சு.கூ. ஆதரவாளர் சுட்டுக் கொலை : குருநாகலில் சம்பவம்








ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒருவர், குருநாகலில் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 26 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கபப்டுகிறது.

கொலையை நேரில் பார்த்த இவரது வாகன சாரதி இது தொடர்பாகப் பொலிஸுக்கு நேரடியாகத் தகவல் தந்துள்ளார். இது தொடர்பாகப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஜட்டிக்குள் மறைத்து போதை மருந்து கடத்திய 6 வயது இரட்டையர்கள் கைது நைஜீரியா ஞாயிற்றுக்கிழமை,

நைஜீரியா நாட்டில் உள்ள லாகோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு ஒரு விமானம் புறப்பட்டு சென்றது. அதில், பயணம் செய்தவர்களிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் ஒரு பெண்ணும், அவளது 6 வயது இரட்டை குழந்தைகளும் ஜட்டிக்குள் மறைத்து “கோகைன்” என்ற போதை பொருள் கடத்தியது தெரிய வந்தது. அப்பெண்ணிடம் இருந்து 3 கிலோவும், 2 சிறுவர்களிடம் இருந்து 700 கிராமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து, அவர்கள் 3 பேரையும் நைஜீரியா போலீசார் கைது செய்தனர். அப்பெண்ணின் கணவரிடம் போதை பொருள் எதுவும் இல்லை.
மேலும் இங்கே தொடர்க...

ஆஸி.,யில் இந்தியர் மீது மீண்டும் தாக்குதல்


பிரிஸ்பேன் ரயில் நிலையத்தில் இந்தியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது தாக்குதல் நடப்பது கடந்த ஓராண்டாக அதிகரித்துள்ளது. சிலர், இனவெறியோடு இந்த தாக்குதலை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், கடந்த மாதம் 17ம் தேதி பிரிஸ்பேனில் உள்ள ரோமா ஸ்ட்ரீட் ரயில் நிலைய நடைபாதையில் ரயிலுக்காக காத்திருந்த நரேந்தர் குமார் படேல்(34) என்ற இந்தியரின் கழுத்தில், அடையாளம் தெரியாத நபர் கத்தியால் காயப்படுத்தியுள்ளார். கத்தி, கழுத்தில் ஆழமாக பதியாத காரணத்தால், நரேந்திர் குமார் உயிர் பிழைத்துள்ளார்.இத்தாக்குதலை நடத்தியதாக கருதப்படும் 26 வயது நபரை போலீசார் கைது செய்தனர். ஆனால், இந்த நபர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார். இந்த செய்தியை, 'கூரியர் மெயில்' என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது.கடந்த மாதம் நடந்த இந்த தாக்குதல், ரயில் நிலைய ரகசிய கேமராவிலும் பதிவாகியுள்ளது. ஆனால், இச்சம்பவத்தை போலீசார் மூடி மறைத்து விட்டதாக இந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

மரண அறிவித்தல்



திருமதி அன்னலட்சுமி கனகசபை
அன்னை மடியில்: 31 டிசெம்பர் 1934 ஆண்டவன் அடியில் :4 ஏப்ரல் 2010

ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி கனகசபை அவர்கள் 04-04-2010 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு நல்லபிள்ளை தம்பதிகளின் அன்புமகளும், காலஞ்சென்ற கதிரிப்பிள்ளை சீதாப்பிராட்டி தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற கனகசபையின் அன்புமனைவியும்,

சூரியகுமாரன்(சுவிஸ்), சந்திரகுமாரன்(இலங்கை), சிவகுமாரன்(சுவிஸ்), சூரியகலா(சுவிஸ்), செல்வக்குமார்(இலங்கை), சசிகலா(ஜேர்மனி), லவசக்தி(சுவிஸ்), சுதர்சன்(சுவிஸ்), சுதாயினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத்தாயாரும்,

செல்வரஞ்சினி(சுவிஸ்), நவமணிதேவி(இலங்கை), தமிழ்செல்வி(சுவிஸ்), ஆனந்தகுமார்(சுவிஸ்), சாந்தி(இலங்கை), உதயகுமார்(ஜேர்மனி), ரகு(சுவிஸ்), ஜெயக்குமார்(சுவிஸ்) ஆகியோரின் மாமியாரும்,

சூரியா, றஜிக்ஷன், சதிர்ஸ்க்கனென், சுபானு, சுயானு, அனுஜா, மிருன், நிதர்சன், ஆனந்தா, கம்சிகா, தாட்சிகா, அனோஜன், சகானா, றஜீவன், சுவேதா, விகாஸ், அஸ்வின், ஜெனுசா, ஜதுசா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 05-04-2010 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 1:00 மணிக்கு ஏழாலை கிழக்கில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
தகவல் உதயகுமார் (அப்பன் )ஜேர்மனி
தொடர்புகளுக்கு
சூரியகுமாரன்சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41419333730
சந்திரகுமாரன் , செல்வக்குமாரன்இலங்கை
தொலைபேசி: +94114919954
சிவகுமாரன்சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41319180557
சூரியகலாசுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41217293126
சசிகலாஜெர்மனி
தொலைபேசி: +497119335267
லவசக்தி , சுதர்சன்சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41812522582
சுதாயினிசுவிட்சர்லாந்து
தொலைபேசி: 0041629620047
தகவல் உதயகுமார் (அப்பன் )ஜேர்மனி
மேலும் இங்கே தொடர்க...