2 மே, 2011

ஒசாமாவை இலக்குவைத்தபோது பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில்

ஒசாமாவை இலக்குவைத்தபோது பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் அக்கறை கொண்டிருந்தோம் - ஒபாமா தகவல்
ஒசாமா பின்லேடனை இலக்குவைத்து தம் நாட்டு படையினரால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் அக்கறை கொண்டிருந்ததாகவும் அவர்களுக்கு இழப்பு ஏற்படாத வகையிலேயே இதனை மேற்கொண்டதாகவும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட செய்தியை பொதுமக்களுக்கு அறிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பின்லேடன் கொல்லப்பட்டமையானது அமெரிக்காவின் முக்கியாமனதோர் சாதனை எனவும் அவர் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது. _

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக