2 மே, 2011

யார் இந்த ஒசாமா? (ஒரு சிறப்புப் பார்வை)






அமெரிக்காவினால் தேடப்பட்டுவந்த அல்-கொய்தாஅமைப்பின்தலைவர்ஒசாமா பின்லேடன்கொல்லப்பட்டுள்ளதாகஅமெரிக்காஉத்தியோகபூர்வமாக
அறிவித்துள்ளது.

யார் இந்த ஒசாமா?

பிறப்பு: 1957,சவுதி அரேபிய கட்டிட நிர்மாணியின் மகன் குடும்பத்தில் 57 பிள்ளைகள். அதில் ஒசாமா பின்லேடன் 17 ஆவது பிள்ளை.

பதின்மூன்றாவது வயதில் அவரது தந்தையை இழந்தார். 17ஆவது வயதில் சிரியன் கெசினை மணந்தார்.

1979 -சோவியத் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மற்றும் ஆப்கான் தலைவர்களை பாகிஸ்தானில் வைத்து சந்தித்தார், பின்னர் ஆப்கானுக்காக நிதித் திரட்டும் பொருட்டு சவூதி அரேபியாவுக்குச் சென்றார்.

1984 -தனது உல்லாச விடுதியை அமைத்து, (பாகிஸ்தான் எல்லை) அங்கிருந்து தன் கண்காணிப்புகளை ஆரம்பித்தார்.

ஆப்கானில் தனது முகாம்களை அமைத்தார்.

சூடானில் சிறிது காலத்தின் பின்னர் தனது இருப்பிடத்தை முழுமையாக ஆப்கானிஸ்தானுக்கு மாற்றிக்கொண்டார்.

1990-1991 அமெரிக்கா மீதான தனது எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தார் (வளைகுடா யுத்தத்தின்போது)

1994 சவூதி அரேபியா இவரது பிரஜாவுரிமையை பறித்துக்கொண்டது.

1996 இவர் பட்வா என்ற மதச்சார்பான அறிக்கையை விடுத்தார், அதில் அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்படவேண்டியவர்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

1998 – கென்யா மற்றும் தன்சானியா நாடுகளிலுள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது குண்டுத்தாக்குதல்.

அமெரிக்காவுக்கு எதிராக அணி திரளுமாறு இஸ்ரேல், சவூதி நாடுகளுக்கு அழைப்பு விடுத்தமையும் தனது தொடர்புகளை விஸ்தரித்துக்கொண்டமையும்.

2001 – அமெரிக்காவில் அமைந்துள்ள உலக வர்த்தக மையங்களின் மீது விமானத் தாக்குதல் - இதுவே மேற்குலக எதிர்ப்புக்கு பிரதான காரணமாக அமைந்தது.

அதன்பிறகு அமெரிக்காவை எச்சரிக்கும் பல்வேறு வீடியோ காட்சிகள் ஒசாமாவால் ஊடகங்களினூடாக வெளியிடப்பட்டன.

ஒசாமாவைத் தேடும்பணியில் அமெரிக்கப்படைகளுடன் பிரித்தானிய படைகளும் இணைந்துகொண்டன.

2011 – ஒசாமா அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக