2 மே, 2011

இரத்தினபுரி மாவட்டத்தில் கடும் மழை: 7 பேர் பலி

இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மின்னல் தாக்கங்கள் காரணமாக இது வரை ஏழு பேர் உயிரிழந்துள்ளதோடு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாகி முகாம்களில் உள்ளதாக இரத்தினபுரி மாவட்ட செயலாளர் எச். டப்ளியு. குணதாஸ தெரிவித்தார்.

அகதிகளாகி முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு ஒரு நாள் உணவுக்காக வழங்கப்பட்ட 100 ரூபாவை 200 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் பத்து மில்லியன் ரூபாய் நிதி இதற்காக ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக