2 மே, 2011

கடமை நேரத்தில் போதை; அக்கரப்பத்தனையில் 10 பொலிஸார் கைது







மே தின பாதுகாப்பு கடமையின் போது போதையில் ஒழுங்கீனமாகச் செயற்பட்ட 10 பொலிஸார் நுவரெலியா அக்கரப்பத்தனைப் பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நுவரெலியாவில் நடைபெற்ற மே தினத்துக்கான பாதுகாப்பில் ஈடுபடுத்தப் பட்டிருந்த பொலிஸாரில் 10 பேர் குடி போதையில் பொதுமக்களிடம் ஒழுங்கீன மான முறையில் நடந்துகொண்டுள்ளனர்.

இவர்கள் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும், நீதிமன்றத்தில் நிறுத்தி சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காமினி மதுரட்ட தினகரனுக்குத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக