8 ஏப்ரல், 2011

மகாவம்சத்தில் ஜனாதிபதிக்காக மூன்று அத்தியாயங்கள்

இலங்கை ஆட்சியாளர்களின் சரிதத்தைக் குறிப்பதாகக் கூறப்படும் மகாவம்சத்தின் புதிய வெளியீட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்று அத்தியாயங்கள் ஒதுக்கப்படவுள்ளன என கலாசார விவகார அமைச்சு நேற்று அறிவித்துள்ளதாக பி.பி.ஸி. செய்தி வெளியிட்டுள்ளது. கி.மு. 543 இல் விஜயன் இலங்கைக்கு வந்தது முதல் மகாசேனன் மன்னனின் ஆட்சிக்காலம் வரை மகாவம்சம் விபரிக்கிறது.

அதனுடன் இணைக்கப்பட்ட குலவம்சம் மற்றும் சூலவம்சம் ஆகியவை நான்காம் நூற்றாண்டு முதல் பிரித்தானியர்கள் 1815இல் இலங்கையை கைப்பற்றும் காலம் வரையிலான சரிதத்தை விபரிக்கிறது என்று இலங்கை கலாசார அமைச்சின் செயலாளர் விமல் ரூபசிங்க கூறியுள்ளார்.

அதனையடுத்து முன்னணி எழுத்தாளர்களால், அதனது 6ஆவது பாகத்தில் 1978, 2010 வரையிலான காலப்பகுதி குறித்து எழுதப்பட்டுவருவதாகவும், அதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினது காலப்பகுதிக்காக மூன்று அத்தியாயங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக