8 ஏப்ரல், 2011

மனித உரிமை குற்றச்சாட்டு: இலங்கை முற்றாக நிராகரிப்பு

மனிதாபிமான நடவடிக்கையின் போது எதுவிதமான மனித உரிமை மீறலுமே இடம்பெறவில்லை என்று அமைச்சரவைப் பதில் பேச்சாளரும் சுற்றாடல் அமைச் சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா நேற் றுத் தெரிவித்தார்.

மனிதாபிமான நடவடிக்கையின் போது மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றதாக சில வெளிநாட்டுச் சக்தி கள் தெரிவித்திருப்பதையும் அமைச் சர் அநுர பிரியதர்ஷன யாப்பா முற் றாக நிராகரித்தார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறுகையில்:- சில வெளிநாட்டினர் கூறுவது போல் இங்கு எதுவிதமான மனித உரிமை மீறலுமே இடம்பெறவில்லை. புலிகள்தான் மிக மோசமான மனித உரிமை மீறலில் ஈடுபட்டனர். இருந்தும் அவர்களது மனித உரிமை மீறலுக்கு எதிராக எவரும் அன்று வாய்திறக்கவில்லை.

நாம் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்துக் கட்டி நாட்டில் அச்சம், பீதியி ன்றி வாழக்கூடிய சூழலை ஏற்படுத் தியுள்ளோம். நாட்டில் அமைதியான நிலைமை கட்டியெழுப்பப்பட்டுள்ளது. நாட்டின் எந்தப் பகுதியிலும் எவரும் சுதந்திரமாக நடமாடக் கூடிய சூழல் உருவாக்கப்பட்டு ள்ளது. பிளவுபட்டிருந்த நாட்டை நாம் ஐக்கியப்படுத்தியுள்ளோம்.

இலங்கை இறைமையும், தன்னா திக்கமும் உள்ள ஒரு நாடு. பயங்கர வாதம்எமக்கும், எமது மக்களுக்கும் பெரும் தலையிடியாகவே இருந்தது. அதனை ஒழித்தே நாம் நாட்டில் அமைதிச் சூழலை ஏற்படுத்தி இருக்கின்றோம்.

எமது நாட்டின் சட்ட திட்டங்களு க்கு ஏற்பவே பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந் நடவடிக்கை சர்வதேச சட்டங் களை மீறும் வகையில் ஒருபோதும் இடம்பெறவில்லை.

அதனால் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை நாம் முழுமையாக நிராகரிக்கின்றோம்.

அப்படியான ஒன்று இங்கு இடம்பெறவில்லை. நாட்டில் புதிய சுதந்திரத்தை மக்கள் அனுபவிக்கின் றார்கள். இதன் மகிமையை எதிர்வரும் சிங்கள- தமிழ் புத்தா ண்டின் போதும் தெளி வாக உணர் ந்து கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக