8 ஏப்ரல், 2011

தென்புலத்தாருக்காக குரல் கொடுத்தவர் அரசனானார் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த எம்மீது துரோகி பட்டம்





தென்புலத்து சிங்களவர்களுக்காக ஜெனீவா சென்ற தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அன்று அரசனாக போற்றப்பட்டார். ஆனால் இன்று தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக ஜெனீவா செல்கின்ற எம்மை துரோகிகள் என்று அரசாங்கம் கூறுகின்றது.

தமிழர் பிரச்சினை என்பதால் தான் இந்த நிலைமையா என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நேற்று சபையில் கேள்வியெழுப்பியது.

இன்றைய அரசாங்கத்தின் கீழ் சட்டம் ஒழுங்கு இல்லை. ஆனால் அவசரகாலச் சட்டத்தின் பேரில் முழு நாடும் இராணுவ மயமாக்கப்பட்டு வருகின்றது. வெளிநாட்டுக் கொள்கை சரியாக அமையாததால் சர்வதேசத்தின் அழுத்தமும் அதிகரித்து வருகின்றது என்றும் அக்கட்சி விசனம் தெரிவித்தது.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக