8 ஏப்ரல், 2011

பகவான் சாய் பாபாவின் உடல் நிலையில் முன்னேற்றம் டாக்டர்கள் தெரிவிப்பு




சத்ய சாய்பாபாவின் உடல் நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஆன்மீக குரு சத்ய சாய்பாபாவின் உடல் நிலை மோசமடைந்ததால், அவர் புட்டபர்த்தியில் உள்ள சத்ய சாய் ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 28ம் திகதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு ஆஸ்பத்திரி குழுவினர் மற்றும் ஆந்திர அரசு சிறப்பு மருத்துவ குழுவினர் ஆகியோர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல் நிலை குறித்து நேற்று மாலை 6 மணியளவில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதில் கூறியிருப்பதாவது, சத்ய சாய் பாபாவின் உடல் நிலையில் தொடர்ந்து நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.

இரத்த அழுத்தம், சுவாசம் போன்றவை திருப்திகரமாக உள்ளது.

முன்பை விட தற்போது எளிதாக அவர் சுவாசிக்கிறார். அவருக்கு நினைவு திரும்பி வருகிறது. அவரது உடல் நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக