22 பிப்ரவரி, 2011

சுதந்திர முன்னணியின் வேட்பு மனுவை நிராகரிக்கக் கோரிய ஐ. தே. கவின் மனு வாபஸ்

மஹரகம நகர சபைக்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தாக்கல் செய்த வேட்பு மனுவை நிராகரிக்க கோரி ஐக்கிய தேசிய கட்சி தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றில் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

மஹரகம நகர சபைத் தேர்தலை நடத்துவோம் என தேர்தல் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸாநாயக்க உறுதிமொழி வழங்கினால் தமது மேன்முறையீட்டு மனுவை வாபஸ் பெற தயாரென குறித்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றைக் கேட்டுக் கொண்டார்.

தேர்தலை உரிய நேரத்தில் நடத்த தேர்தல் ஆணையாளர் நாயகம் தயாராக உள்ளார் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சார்பில் நேற்று நீதிமன்றில் ஆஜரான அரச தரப்பு சட்டத்தரணி தெரிவித்தார். இதன்படி தமது மேன் முறையீட்டு மனுவை ஐக்கிய தேசிய கட்சி வாபஸ் பெற்றுக்கொண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக