22 பிப்ரவரி, 2011

கல்விக் கல்லூரி பூர்த்தி செய்துள்ள 2500 பேருக்கு ஆசிரிய நியமனம்'


தேசிய கல்வியியற் கல்லூரிகளில் கல்வியைப் பூர்த்தி செய்து வெளியேறியுள்ள 2500க்கும் மேற்பட்டோருக்கு மார்ச் மாதம் ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்றுத் தெரிவித்தார்.

தேசிய கல்வியியற் கல் லூரிகளின் பரீட்சை பெறு பேறுகளை முன்னரே பெற் றுக் கொண்டதன் காரணமாக முன்னைய வருடங்களை விட துரிதமாக இம்முறை ஆசிரிய நிய மனங்களை வழங்குவதற்கான நட வடிக்கைகளை மேற்கொள்ள முடி ந்ததாக அமைச்சர் மேலும் கூறினார்.

2008, 2009 மற்றும் 2010 ம் ஆண்டு களில் இந்த ஆசிரிய நியமனங்கள் ஜூன் அல்லது ஜுலை மாதங்க ளிலேயே வழங்க முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பத்தரமுல்லையில் உள்ள இசுறு பாயாவில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார். அழகியற்கலை பட்டதாரிகள் 3100 க்கு மேற்பட்டோருக்கு ஆசிரிய நியமனம் வழங்க அரசாங்கம் தீர்மா னித்துள்ள அதேவேளை சித்திரம் மற்றும் நடனத்துக்கான ஆசிரியர்கள் குறைவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த எண்ணிக்கையில் 700 பேரை தவிர்ந்த ஏனையோர் ஆரம்ப வகுப் புகளில் ஆசிரியர்களாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் இவர்களுக்கு பயிற்சிக் காலத்தில் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங் கப்படுமென்றும் அமைச்சர் தெரி வித்தார்.

நாட்டில் உள்ள 340 தேசிய பாடசாலைகளில் 105 பாடசாலை களில் அதிபர் பதவிகளுக்கான வெற் றிடம் இருப்பதாகவும், எதிர் கால த்தில் அவை நிரப்பப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

வவுனியாவில் தேசிய கல்விக் கல்லூரி 2009 ஆம் ஆண்டு வரை அகதி முகாமாக இருந்ததை நினைவு கூர்ந்த அமைச்சர், இன்று அது தமிழ் மொழி ஆசிரியர்கள் பயிற்சிபெறும் கல்லூரியாக மாற்றப் பட்டுள்ளதாகவும் இவ்வருடம் வவு னியா தேசிய கல்விக் கல்லூரியில் 140 தமிழ் ஆசிரியர்கள் பயிற்சி பெற்று வெளியேறவுள்ளதாகவும், அவர்கள் வடக்கு, கிழக்கு பாடசா லைகளில் இணைத்துக் கொள்ளப் படுவார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.

அடுத்த வருடம் வவுனியா தேசிய கல்விக் கல்லூரியில் 400 தமிழ் ஆசிரி யர்களை பயிற்றுவித்து அவர்களை வடக்கு, கிழக்கு பாடசாலைக்கு நியமிக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக