2 பிப்ரவரி, 2011

லங்கா ஈ நியூஸ் அலுவலக தாக்குதலுக்கு அமெரிக்கா கவலை

கொழும்பிலுள்ள லங்கா ஈ நியூஸ் அலுவலகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இந்த தாக்குதலின் பின்னணியில் எவர் இருப்பினும் அந்த வன்முறையானது ஊடக நிறுவனங்களின் குரலை நசுக்கும் வகையிலும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை அச்சுறுத்தும் முகமாகவும் நாட்டின் ஜனநாயகத்தை குறைத்து மதிப்பிடும் வகையிலும் அமைந்துள்ளது. இத்தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணையொன்றை நடத்துமாறு ஜனாதிபதி பணித்துள்ளமையை நாம் அறிகின்றோம்.

எனவே, விசாரணையை துரிதமாகவும் நீதியாகவும் மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது அவசியமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக