4 பிப்ரவரி, 2011

அரச குழு - தமிழ்க் கூட்டமைப்பு நேற்று சந்திப்பு

அரசாங்கக் குழுவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் நேற்று மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தின.

இந்தச் சந்திப்பு மிகவும் சினேகபூர்வமாக இருந்ததாக இரு தரப்பினரும் தெரிவித்தனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

மீள்குடியேற்றம், உயர்பாதுகாப்பு வலயம் மற்றும் நீண்ட நாள் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலும் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என அவர் தெரிவித்தார். இதே வேளை, அதனைத் தொடர்ந்து அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமானது எனவும் அது தொடர்பான விடயங்கள் தொடர்ந்து வரும் கூட்டங்களிலும் பேசப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த சுற்று பேச்சுவார்த்தை மார்ச் மாத முதலாம் வார காலப் பகுதியில் இடம் பெறும் என அவர் தெரிவித்தார். நேற்றைய பேச்சுவார்த்தையிலே அரச தரப்பு சார்பில் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, நிமல் சிறிபால டி சில்வா, ஜீ. எல். பீரிஸ் குழுவின் செயலாளர் சச்சின் டி வாஸ் குணவர்தனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பிலே ஜனாதிபதி சட்டத்தரணி கணகேஸ் வரன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண் டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக