4 பிப்ரவரி, 2011

63 சுதந்திர தினம் இன்று






இலங்கையின் 63வது சுதந்திர தினம் இன்று கதிர்காமத்தில் கொண்டாடப்படுகிறது. தேசிய நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கலந்துகொள்ளவிருப்பதுடன், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள், இராஜதந்திரிகள் எனப் பலர் இச் சுதந்திரதின விழாவில் கலந்துகொள்கின்றனர்.

இராணுவத்தினர், விமானப் படையினர், கடற்படை யினர், சிவில் பாதுகாப்புப் படை மற்றும் பொலிஸ் படையைச் சேர் ந்த 3,000 பேரின் அணிவகுப்பு மரி யாதைகள், 1400 கலைஞர்கள் மற்றும் 1000 பாடசாலை மாணவர்க ளின் கலாசார அணிவகுப்பு என்ப னவும் நடைபெறுகின்றன.

சுதந்திர தினத்தை முன்னிட்டு காலை 6.30 மணிக்கு அனைத்து மதங்கள் சார்பிலும் கதிர்காமத்தில் மத வழிபாடுகள் இடம்பெறுகின்றன. இதில் முக்கிய அமைச்சர்கள் உட்பட பலர் கலந்துகொள்கின்றனர். அதனைத் தொடர்ந்து பிரதான வைபவம் காலை 8.50 மணிக்கு தேசியக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைக்க ஊவா மாகாணப் பாடசாலைகளைச் சேர்ந்த 100 மாணவர்கள் தேசிய கீதம் மற்றும் ஜயமங்கள கீதத்தை இசைக்கவுள் ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மரியாதை செலுத்தி 21 மரியாதை வேட்டுக்களை தீர்ப்பதற்கு இராணுவத்தினர் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்ட பின்னர் கொண்டாடப்படும் இரண்டாவது சுதந்திர தினமாக 63வது சுதந்திர தினத்தில் மொனராகல, கதிர்காமம், பதுளை, கொழும்பு உட்பட நாட்டின் பல பாகங்களிலிருந்து மக்கள் கலந்துகொள்கின் றனர். இதற்கான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்துள்ளது.

அதேநேரம், சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கும் (தேசத்துக்கு மகுடம்) கண்காட்சி மொனராகலையில் இன்று ஆரம்பித்து வைக்கப்படுகிறது.

இதனைவிட 63 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற் பாடு செய்யப்பட்டுள்ளன. அனைத் துப் பகுதிகளிலுமுள்ள அரசாங்க அலுவலகங்களில் காலை தேசியக் கொடி ஏற்றி, தேசிய கீதம் இசைக் கப்படவுள்ளது. பிரதேச ரீதியில் சிரமதானம் உள்ளிட்ட சமூகப் பணி கள் முன்னெடுக்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக