4 பிப்ரவரி, 2011

1, 550 கைதிகள் இன்று விடுதலை சுதந்திர தினத்தையிட்டு பொது மன்னிப்பு






63ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 1550 சிறைக் கைதிகள் இன்று விடுதலை செய்யப்படுவதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு கூறியது. நாடு முழுவதும் 37 சிறைச்சாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கைதிகளே இவ்வாறு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படுகின்றனர்.

இவர்களில் தண்டப்பணம் செலுத்த முடியாமல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டவர்களே அதிகம் என சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சதீஷ் குமார் கூறினார்.

வெலிக்கடை, மாத்தறை மற்றும் போகம்பர சிறைகளிலிருந்தே கூடுதலான கைதிகள் விடுவிக்கப்படுவதோடு இவர்களை விடுதலை செய்வதை முன்னிட்டு சிறைச்சாலைகளில் விசேட வைபவங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய மேற்படி கைதிகளுக்கு விடுதலை வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக