18 ஜனவரி, 2011

இலங்கையில் இடம்பெற்ற ஐஃபாவில் கலந்து கொள்ளாமைக்கு ஏற்பாட்டுக் குழுவே காரணம்: அமிதாப்

இலங்கையில் இடம்பெற்ற சர்வதேச இந்தியத் திரைப்பட அக்கடமி (ஐஃபா) நிகழ்வில் தான் கலந்துகொள்ளாமைக்கு ஏற்பாட்டுக் குழுவினரே காரணமென பொலிவூட் நடிகர் அமி தாப் பச்சன் தெரிவித்துள்ளதாக இணையத்தளமொன்றினை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் நடைபெற்ற ஐஃபா நிகழ்வில் நான் கலந்துகொள்ள வேண்டுமென்ற தேவை ஏற்பாட்டுக்கு குழுவினருக்கு இருக்கவில்லை. அதனாலே தான் இலங்கைக்குச் செல்லவில்லை என அமிதாப் தெரிவித்துள்ளார். அதாவது, அவரது சேவைகள் மேலும் தேவையில்லை என ஏற்பாட்டுக்குழு அமிதாப்புக்குத் தெரிவித்திருந்தது.

அதேநேரம், இவ்வருடம் ரொறன்ரோவில் நடைபெறவுள்ள ஐஃபா விழாவுக்கு நான் வரமாட்டேன். ஏனென்றால், எனது சேவை தேவையற்றுப் போயுள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. இதுதான் இலங்கை விடயத்திலும் நடந்தது என டிவிட்டர் சமூக இணையத் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக