25 ஜனவரி, 2011

தாய்லாந்துக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற இந்தியப் பிரஜை விமான நிலையத்தில் கைது




இலங்கையிலிருந்து தாய்லாந்து நாட்டுக்கு 15 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் கடத்த முயன்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கிறார்.

சந்தேக நபரிடமிருந்து 15 கிலோ கிராம் கொகேன் போதைப்பொருளை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இந்தியாவிலிருந்து வந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இந்தக் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிடுகிறார்.

விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக