25 ஜனவரி, 2011

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த யாழ்.பொலிஸ் நிலையங்களில் சி.ஐ.டியினர் இரவிலும் கூட பீதியின்றி மக்கள் வழமை போல நடமாட்டம்


யாழ். குடாநாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்களை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில் அங்குள்ள பொலிஸ் நிலையங்களில் விசேட புலனாய்வு அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

பொலிஸ் அத்தியட்சகர்கள் தலை மையில் இந்த விசேட புலனாய்வுக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டத்திற்கு பொறுப் பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி அமரகோன் நேற்றுத் தெரி வித்தார்.

குற்றச் செயல்கள் இடம்பெறு வதை முழுமையாக கட்டுப்படுத் தும் வகையில் பொலிஸ் மா அதிபர் கலாநிதி மஹிந்த பால சூரியவின் ஆலோசனைக்கமைய இந்த புலனாய்வு அதிகாரிகள் நிய மிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தற்பொழுது யாழ். மாவட்டத் தில் அமைதியான சூழல் காணப் படுவதாக தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், எவரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணத்தில் இரவு நேரங் களில் கூட அச்சமின்றி எங்கும் சென்று வரக் கூடிய அளவுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

கொலை, கொள்ளை, திருட்டு, குற்றச் செயல்கள் இடம்பெற்ற பகுதி களில் இந்த விசேட புலனா ய்வு அதிகாரிகள் கடமையில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர்.

இடம்பெறும் குற்றச் செயல், அவற்றை தூண்டும் நபர்கள் தொடர்பில் புலனாய்வுத் தகவல் களை இந்த குழுக்கள் பெற்று அதனை கட்டுப்படுத்தத் தேவை யான உரிய நடவடிக்கைகளை மாவட்ட பாதுகாப்பு உயர் அதி காரிகளின் ஆலோசனைகளுடன் முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பி ட்டார்.

சாதாரணமாக பொலிஸ் நிலையங் களில் உள்ள புலனாய்வு மற்றும் சி. ஐ. டி. குழுக்களுக்கு மேலதிகமா கவே இந்த அதிகாரிகள் நியமி க்கப்பட்டுள்ளனர் என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித் தார்.

தற்பொழுது யாழ்ப்பாணத்தில் இரவு நேரங்களில் இசைக் கச்சேரி கள் இடம்பெறுவதாக தெரிவித்த அவர், அதில் பெரும் எண்ணிக்கை யிலான மக்கள் கலந்துகொள்வ தாகவும் குறிப்பிட்டார். ஒரு சில சம்பவங்களை காரணங்காட்டி பொய்யான, திரிபுபடுத்தப்பட்ட தக வல்களை பரப்ப சிலர் முயற்சிப் பதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுட்டிக் காட்டினார்.

பொலிஸாருக்கு மேலதிகமாக முப்படையினரும் விசேட பாது காப்பு கடமையில் ஈடுபடுத் தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற சில குற்றச் செயல்கள் தொடர்பாக விரிவான விசாரணைகள் தொடர் ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக