26 ஜனவரி, 2011

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முல்லை மாவட்டத்தில் துரிதம் 22,909 குடும்பங்களைச் சேர்ந்த 68,409 பேர் மீளக் குடியமர்ந்துள்ளனர் அரச அதிபர்


முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகள் துரிதகதியில் இடம்பெற்றுவருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஏ. பத்திநாதன் தெரிவித்துள்ளார்.

அந்த அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஐந்து உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலும் 22,909 குடும்பங்களைச் சேர்ந்த 68,409 பேர் மீளக்குடியமர்த்தப்பட்டு ள்ளதாக அரச அதிபர் மேலும் தெரிவித்து ள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாந்தை கிழக்கு, துணுக்காய், ஒட்டுசுட்டான், கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு ஆகிய ஐந்து உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலும் இந்த மீள்குடியேற்றம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு மீளக்குடியமரத் திரும்பியுள்ள மக்களின் குடியேற்றத் துக்கான வீடுகள் அரச, அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்க ளின் உதவியுடன் அமைத்துக் கொடுக்கப் பட்டுள்ளன.

இதனைவிட, முல்லைத்தீவு மாவட்ட த்தில் மீளக்குடியேறி வரும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் பல்வேறு புனர்வாழ்வு மற்றும் மீள்கட்டு மான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் வீதிகள், பாலங்கள் புனரமைப்பு, உரக் களஞ்சியங்கள் அமை ப்பு மற்றும் பாடசாலைகள் புனரமைப்பு போன்ற வேலைத் திட்டங்கள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருவ தாகவும் முல்லைத்தீவு, மாவட்ட அரசாங்க அதிபர் ஏ. பத்திநாதன் மேலும் தெரிவித்தார்.

இதேவதிளை, இன்னும் மீள்குடியேற்றத் துக்கு உட்படாது எஞ்சியுள்ளோரையும் மீளக் குடியமர்த்த நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக