10 ஜனவரி, 2011

தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் மாநாட்டின் கிளை அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும்: அஷ்ரப் சிஹாப்தீன்

தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் மாநாட்டின் கிளை அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும் என மாநாட்டின் செயலாளர் அஷ்ரப் சிஹாப்தீன் சற்றுமுன் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு நடத்த வேண்டும். மேலும் மாநாட்டின் தலைமையகம் இலங்கையில் இயங்குவதோடு தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் கிளை அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும்.

எழுத்தாளர்களின் நலன் கருதியும் மாநாட்டுக்காகவும் நிதியம் உருவாக்குதல், சர்வதேச தமிழ் எழுத்தாளர்களின் ஆக்கங்களை வெளிக்கொண்டுவர பதிப்பகம் ஒன்றை அமைத்தல் முதலானவற்றை செயற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக