10 ஜனவரி, 2011

கணனிக்குள் கஞ்சா: இளைஞர்கள் ஐவர் கைது




கணனி ஒன்றில் மறைத்து வைத்துக் பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்த ஐந்து இளைஞர்கள் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை நகரில் இளைஞர் ஒருவரும் அவருடைய நண்பர்கள் சிலரும் சேர்ந்து தனது வீட்டுக் கணனியின் உட்பகுதியில் கஞ்சாவை மறைத்து வைத்து நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு விற்பணை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் கைது செய்யப்பட்ட போது கணனிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 கஞ்சா பக்கட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் ஒரு பக்கட் 250 ரூபா வீதம் விற்பனை செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கண்டி பிரதான நீதவான் முன் ஆஜர் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக