6 ஜனவரி, 2011

தமிழ் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில்


தைப்பொங்கல் பண்டிகையை
யாழ்ப்பாணத்தில் கொண்டாட ஏற்பாடு



உழவர் திருநாளான தைப்பொங்கல் தினத்தை யாழ்ப்பாணத்தில் கொண்டாடு வதற்கு புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் முழு அளவில் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சதீஸ்குமார் தெரிவித்தார்.

யாழ். மத்திய கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்படவிருப்பதுடன், அன்றைய தினம் தமிழ் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் கலை நிகழ்வுகள் நடைபெறவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அன்றைய தினம் முன்னணி இசை கலைஞர்களைக் கொண்டு இசை நிகழ்ச்சியொன்றையும் ஏற்பாடு செய்திருப்பதாக சதீஸ்குமார் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக