14 ஜனவரி, 2011

591 முகாம்களில் 3 இலட்சத்து 25 ஆயிரம் பேர் தஞ்சம்; நிவாரணப் பணிகள் துரிதம்; ரூ. 213 மில்லியன் நிதி ஒதுக்கீடு


கிழக்கு மாகாணம் உட்பட 14 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டோர் தொகை 10 இலட் சத்து 81, 819 ஆக உயர்ந்துள்ளது. இதில் 83, 722 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 25, 348 பேர் 591 முகாம் களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இதுவரை 138 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதோடு இன்று மேலும் 75 மில்லியன் ரூபா அனுப்ப உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வெள்ள அனர்த்தம் தொடர்பாக விளக்கமளிக்கும் முதலாவது விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:-

வழமைக்கு மாறான அசாதாரண நிலையினாலே இவ்வளவு மோசமான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இது சுனாமி அனர்த்தத்திற்கு அடுத்தபடியாக இலங்கையில் ஏற்பட்ட மோசமான அனர்த்தமாகும்.

வெள்ளத்தினால் 2, 87, 871 குடும்பங் களைச் சேர்ந்த 10, 81, 819 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தோர் தொகை 23 ஆக அதிகரித்துள்ளதோடு ஒருவர் காணாமல் போயுள்ளார். 36 பேர் காயமடைந்துள்ளனர். நாம் மேற்கொண்ட ஒத்திகைகள், அறிவூட்டல்கள் காரணமாக உயிர்ச்சேதங்கள் குறைக்க முடிந்துள்ளது. அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் கூட உயிர்ச்சேதம் குறைவாகவே இடம்பெற்றுள்ளன.

வெள்ளப் பெருக்கினால் 2, 680 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு 15, 274 வீடுகள் பாதி சேதமடைந்துள்ளன. வெள்ளம் வடிவதோடு சேதமடைந்த வீடுகளின் தொகை இரட்டிப்பாகும்.

வெள்ளத்தினால் வயல் நிலங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தை கணிக்க முடியாதுள்ளது.

இந்த பாரிய சேதத்துக்கு முகம் கொடுக்கக்கூடிய சக்தி எமது அரசாங்கத்திற்கு இருக்கிறது. இத்தகைய அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய தெளிவான திட்டம் உள்ளதாலே இதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டு வருகிறது.

நாம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று உரிய பணிப்புரை களை வழங்கினோம். சுற்று நிருப ங்களுக்கு மட்டுப்படாது பாதிக்கப் பட்ட மக்களுக்காக சகல நடவடிக் கைகளும் எடுக்கப்படுகிறது. இதற் கான சகல வழிகாட்டல்கள் மற் றும் பணிப்புரைகளையும் ஜனா திபதி வழங்கி வருகிறார். தினமும் இரு தடவையாவது அவர் என் னுடன் தொடர்புகொண்டு உரிய பணிப்புரைகளை வழங்கி வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தடையி ன்றி நிவாரணம் வழங்க நிதி வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட செயலாளர்கள் கேட்டவுடனே நிதி அனுப்பப்படுகிறது.

பாதிக்கப்பட்ட ஒருவரையும் கூட பட்டினி போடக்கூடாது என்பது ஜனாதிபதியின் கண்டிப் பான உத்தரவாகும்.

கொழும்பில் இருந்து மேலதிக பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு மக்களுக்கு அனுப்பப் படுகிறது. பால்மா, படுக்கை விரிப்பு, துவாய் என்பனவும் வழங்கப்படுகிறது. போத்தலில் அடைக்கப்பட்ட நீரும் வழங்கி வருகிறோம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவது தொடர்பாக பல நாட்டுத் தலைவர்கள் ஜனாதி பதியுடன் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். இந்தியாவில் இரு ந்து இரு விமானங்களில் தலை யணை, பிளங்கட், உலர் உணவு உட்பட பல பொருட்கள் இன்று வந்தடைய உள்ளன. அவை உட னடியாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு அனுப்பப்படும்.

பல அரச சார்பற்ற நிறுவனங்கள் வர்த்தகர்கள் போன்றோரும் உதவ முன் வந்துள்ளனர். பழுதடையாத உணவுகள், தலையணை, படுக்கை விரிப்பு என்பனவற்றை வழங்குமாறு கோருகிறோம். சிலர் நிதி திரட்டுவ தாக அறிகிறோம். யாருக்கும் நிதி வழங்காதீர்கள். மேலும் பல நாடுகளின் உதவிகளைப் பெற பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை நிர்மாணிக்கவும் வீட்டுத் தளபாடங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப் படும். சுயதொழில் முயற்சிகளை தொடரவும் உதவ உள்ளோம். வீடுகளை அமைக்கவும் நிவாரணம் வழங்கவும் மாத்திரம் 6000 மில்லியன் வரை செலவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக