14 ஜனவரி, 2011

நாடு முழுவதும் கடும் குளிர்:கொழும்பு வெப்பநிலை 18.8 ச் வி

நாட்டில் நிலவிவரும் குளிரு டன் கூடிய காலநிலை காரண மாக கொழும்பு உட்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை குறைவடைந்து குளிர்காலநிலை நிலவி வருகிறது.

கொழும்பு மாவட்டத்தின் வெப்பநிலை 18.8 செல்சியசாகக் குறைவடைந்துள்ளது. 61 வருடங்களின் பின்னர் கொழும்பு மாவட்டத்தின் வெப்பநிலை மிகவும் குறைவடைந்திருப்பதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

வரெலியா மாவட்டத்தின் வெப்பநிலை 7.9 செல்சியசாகவும் குறைவடைந்துள்ளது. அது மாத்திரமன்றி வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளின் வெப்பநிலையும் குறைவடைந்திருப்பதாக காலநிலை அவதான நிலைய அதிகாரி ஒருவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

இலங்கையின் கிழக்கு மாகாணம் உட்பட ஏனைய பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் குளிர்காலநிலை தொடரும் என்றும் அவ்வதிகாரி குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கையின் மழை வீழ்ச்சி அண்மை நாட்களில் 100 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ள கொழும்பு வானிலை அவதானிப்பு மையம், எந்தவொரு மோசமான காலநிலை மாற்றத்தையும் எதிர்கொள்வதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

உலகளவில் எதிர்கொள்ளப்படும் ‘லாநினா’ விளைவை இலங்கையும் எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாகவே அண்மைய நாட்களாக நாட்டின் பல்வேறு பாகங்களிலும் மோசமான மழைவீழ்ச்சி காணப்படுவதாகவும், கடல் நீரின் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களால் ஆவியாகும் நீர் வானில் கடுமையான மேக மூட்டங்களை உருவாக்கி மோசமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்துவதே பொதுவாக ‘லாநினா’ விளைவு என்று சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக மேலைத்தேய நாடுகள் பலவற்றில் மோச மான காலநிலை நிலவுகிறது. இதன் பாதிப்பே இலங்கையின் மோசமான மழை வீழ்ச்சி என்றும் வானிலை அவதானிப்பு மையம் கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக