14 ஜனவரி, 2011

ஜனாதிபதியின் ஆளுமைக்கு பாக். ஜனாதிபதி சர்தாரி பாராட்டு


பாகிஸ்தானுக்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையிலான பாராளுமன்ற தூதுக்குழு பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரியை அவரது மாளிகையில் சந்தித்துள்ளது.

இதன் போது 30 ஆண்டு கால பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது அரசாங்கத்தை மனப்பூர்வமாக பாராட்டுவதாகவும் உலகையே நடுநடுங்க செய்து கொண்டிருந்த பயங்கரவாத இயக்கமான எல்.ரீ.ரீ.ஈ யை. முழுமையாக அடக்கியது பெரும் சாதனையென்று பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி பாராட்டுகளை தெரிவித்தார்.

யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்த கால கட்டத்திலும் இலங்கை அரசு சிறப்பாக நாட்டின் தேசிய பொருளாதாரத்தை மீள் எழுப்பி பொருளாதாரத்தை மறுமலர்ச்சியடைய செய்திருப்பது பெரும் சாதனையென்று பாராட்டிய பாகிஸ்தான் ஜனாதிபதி, ஒரு நேர்மையான, நெறியான தேசத்தலைவரின் சிறந்த ஆளுமை மூலமே இதனை சாதிக்க முடியுமென மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இலங்கை மக்கள் கல்வியறிவில் ஆசிய நாடுகளிலேயே முன்னணியில் திகழ்கின்றார் கள் என தெரிவித்த பாகிஸ்தான் ஜனாதிபதி, தம் மக்களின் கல்விப் பசியை போக்குவதற்கு இலங்கை அரசாங்கம் தங்களது திறமை மிக்க கணித ஆசிரியர்களின் சேவையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் குறைந்த பட்சம் 1000 இலங்கை கணித ஆசிரியர்களின் சேவை பாகிஸ்தானுக்கு அவசியமாக தேவைப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

உலக டெஸ்ட் கிரிக்கெட் அரங்கிலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் சில வருடங்களுக்கு முன்னர் இணைந்து கொண்ட இலங்கையணி 1996ம் ஆண்டில் வெற்றியீட்டியதும் இலங்கை சர்வதேச ரீதியில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் முதல் 3ம் நிலைகளில் இருப்பது பாராட்டப்பட கூடியது எனவும் கூறினார். தான் பல வருடங்களாக இலங்கை அணியின் பகிரங்க ஆதரவாளராகவும் இருப்பதாக தூதுக்குழுவிடம் தெரிவித்தார்.

இவ் பாகிஸ்தான் விஜயத்தை மேற்கொண்ட இலங்கை தூதுக் குழுவிற்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தனது துணை வியார் சந்திரா மாலினியுடன் சென்றிருந்தார். இக்குழுவில் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். அஸ்வர் விஜயகலா மகேஸ்வரன், கமலா ரணதுங்க ஆகியோருடன் பாராளுமன் றத்தின் பிரதிச் செயலாளர் தம்மிக்கா கித்துள்கொட ஆகியோரும் சென்றிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக