14 ஜனவரி, 2011

கிழக்கு வான் வெளுத்தது;அடைமழையும் ஓய்ந்தது தாழமுக்கம் பலமிழந்ததாக அறிவிப்பு


இரு வாரங்களாக நீடித்த அடை மழை நேற்று முதல் குறைவடைய ஆரம்பித்திருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் சமிந்திர சில்வா நேற்றுத் தெரிவித்தார்.

இரு வாரங்களுக்கும் மேலாக நீடித்து வரும் அடை மழைக் காலநிலையும் இன்று (14ம் திகதி) மாலையாவதற்குள் வழமையான நிலைக்குத் திரும்ப முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வளி மண்டலத்தில் இலங்கைக்கு அருகில் கிழக்காக உருவாகி ஒரு வார காலமாக நீடித்த அமுக்க நிலை நேற்று முதல் பலவீனமடைய ஆரம்பித்துள்ளது. அதனால் இன்று மாலையாவதற்குள் காலநிலை சீரடைய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த இரு வாரங்களாக தொடராக அடைமழை பெய்து வந்த மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் நேற்று மழை குறைவடைந்திருந்தது. வெள்ள நீரும் வடியத் தொடங்கியுள்ளது.

வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்திருந்த மக்களும் நேற்று முதல் தங்கள் சொந்த இருப்பிடங்களுக்கு செல்லுவதற்கு ஆரம்பித்திருப்பதாக மாவட்ட மட்ட அதிகாரிகள் கூறினர். வானிலை அவதான நிலைய அதி காரி மேலும் கூறுகையில் அடைம ழைக் காலநிலை குறைவடைந்தா லும் கிழக்கு, வடக்கு, வட மத்திய, ஊவா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இடையிடையே மழை பெய்யும்.

அதேநேரம் வடக்கு, கிழக்கு, வடகிழக்கு, மன்னார் குடா கடற்பரப்புக்கள் அடிக்கடி கொந்தளிப்பதாகக் காணப்படும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் மணித்தியாலயத்திற்கு 50 கிலோ மீற்றர் முதல் 60 மீற்றர் வரை வேகத்தில் காற்று வீச முடியும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக